Saturday, April 5, 2014

தோஷம் கிடையாத பூக்கள் தோஷம் கிடையாத தீர்த்தம்

தெய்வங்களுக்கு பூஜை செய்வதற்குரிய மலர்கள், வீட்டுத் தோட்டத்தில் பூஜைநேரத்தில் பறித்ததாக இருப்பது ரொம்பவும் விசேஷம். இதற்காக பெரிய இடமெல்லாம் தேவையில்லை. வீட்டில் ஒரு தொட்டியை வைத்து, ஏதேனும் ஒரு மலர்ச்செடி வளர்த்தாலே போதும். இந்தப் பூக்களை பறித்த அன்றே சூட்டினால் முழு பலனும் கிடைக்கும். மறுநாள் சூட்டினால் சுமாரான பலன் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். குளத்தில் பூக்கும் தாமரை, அல்லிப் பூக்கள் மற்றும் வில்வம், துளசி, விபூதிப் பச்சிலை, மருக்கொழுந்து, வெள்ளி, தங்கப் பூக்களுக்கு தோஷம் கிடையாது. அதாவது, இவற்றை எப்போது பறித்தாலும், குறிப்பிட்ட நாள் என்று இல்லாமல் எத்தனை நாள் கழித்து வேண்டுமானாலும் சூட்டலாம். அதே போல, கங்கை, யமுனை, காவிரி, தாமிரபரணி போன்ற புண்ணிய நதிகளின் தீர்த்தத்திற்கும் தோஷம் கிடையாது. இந்த தீர்த்தங்களை எப்போது வேண்டுமானாலும் பூஜைக்குப் பயன்படுத்தலாம்

No comments:

Post a Comment