Sunday, April 6, 2014

வலம்புரி சங்கு வாங்க வேண்டிய நேரம்

ரு நல்ல வலம்புரிச் சங்காக வாங்கி வந்து நமது கடைகள், வியாபார ஸ்தலங்கள், தொழிற்கூடங்கள், அலுவலகங்கள் ஆகிய இடங்களில் வைத்து தினமும் தூபமிட்டு, கற்பூர ஆரத்தி காட்டி வந்தால் நல்ல பலன்கள் நாளும் நம்மை நாடித் தேடி ஓடிவரும். 

வலம்புரிச் சங்கை வெள்ளிப்பூண் போட்டு வைத்திருப்பதே மிகவும் நல்லதாகும். வலம்புரிச் சங்கை நாம் ஒரு வளர்பிறையில் வரக்கூடிய நல்ல நாளில் வாங்கி, அதைச் சுக்ர ஹோரை அமைந்த வேளையிலேயே நமது வீட்டிற்குக் கொண்டுவர வேண்டும். 

நமது வீடுகளிலும், அலுவலகங்களிலும் நாம் வைத்திருக்கும் வலம்புரிச் சங்கானது நமது உள்ளங்கையில் அடங்கக்கூடியதாக இருக்கவேண்டும். மேலும் அது நல்ல வெண்ணிறமாகவும் இருக்க வேண்டும். பித்தளை அல்லது வெள்ளி ஸ்டாண்டிலோ, அல்லது வெள்ளித் தட்டிலோ தென்வடலாக வலம்புரிச் சங்கு வைக்கப் படவேண்டும்.

No comments:

Post a Comment