Sunday, April 6, 2014

கோமுகவழி என்பதன் பொருள்

கருவறையில் சுவாமிக்கு அபிஷேகம் செய்த திரவியங்கள் வழியும் பாதைக்கு கோமுகம் என்று பெயர். இதில் வரும் நீரை நிர்மால்யதீர்த்தம் என்று சொல்வர். இதைத் தலை, கண்களில் வைத்துக் கொள்வர். 

சிவாலயத்தில் கோமுகத்திற்கு மேலே வடக்கு நோக்கியபடி துர்க்கை சந்நதி இருக்கும். கோ என்றால் பசு. சில கோயில்களில் பசுவின் முகத்தின் வடிவத்திலேயே கோமுகம் அமைப்பது சிறப்பு. கோவில் கோமுகம் மிக புனிதமானது.  

அங்கு வழியும் தீர்த்தம் நம்முள் இருக்கும் அனைத்து கெடுதல்களையும் விலக்கும். கோமுகததை சுத்தம் செய்து, சந்தானம் குங்குமம் இட்டாலே அங்கு உறையும் இறைக்கு நாமே நேரடியாக பூஜை செய்த பலன் கிடைக்கும்

No comments:

Post a Comment