Friday, April 4, 2014

பலிபீடம் நம் மீது பட்டு விட்டாலே குளிக்க வேண்டும்


கோயிலில் கோபுர வாசலுக்கும், கொடி மரத்திற்கும் இடையில் உள்ள மேடைக்கு பலிபீடம் என்று பெயர். நித்யபூஜையின் முடிவில், பலிபீடத்தில் கோயிலிலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும், அன்னம் (சாதம்) வைப்பர். இதை "பலி போடுதல்' என்பர். இதனை தெய்வங்கள் சாப்பிட்டுச் செல்வதாக ஐதீகம். வழிபாட்டின் போது, பலிபீடத்தை தொட்டுக் கும்பிடுவதோ, உரசிச் செல்வதோ கூடாது. இன்னும் சொல்லப்போனால், பலிபீடம் நம் மீது பட்டு விட்டாலே ஒருமுறை குளிக்க வேண்டும் என்கிறது ஆகமங்கள்

No comments:

Post a Comment