Friday, April 4, 2014

ராகு காலத்தை அறிய எளிய சூத்திரம்

தினமும் ஒன்றரை மணிநேரம் ராகுகாலம். அந்த நேரத்தில் சுபவிஷயத்தை தவிர்ப்பது நல்லது. அந்த நேரத்தை கண்டுபிடிக்க எளிய வழி ஒன்று இருக்கிறது.

""திருநாள் சந்தடியில் வெயிலில்
புழுதியில் விளையாடச் செல்வது ஞாயமா
?
என்ற கேள்வி கேட்டால் போதும். இதிலுள்ள ஒவ்வொரு சொல்லும் வாரநாட்களைக் குறிக்கும்.

திருநாள் - திங்கள் - காலை - 07.30 - 09.00
சந்தடியில் - சனி - காலை - 09.00 - 10.30
வெயிலில் - வெள்ளி - காலை - 10.30 - 12.00
புழுதியில் - புதன் - பகல் - 12.00 - 01.30
விளையாட - வியாழன் - பகல் - 01.30 - 03.00
செல்வது - செவ்வாய் - மாலை - 03.00 - 04.30
ஞாயமா - ஞாயிறு - மாலை - 04.30 - 06.00
எளிதாக இருக்கிறதல்லவா!

No comments:

Post a Comment