Saturday, July 19, 2014

உத்தர காமிக மஹாதந்த்ரத்தில் மஹோத்ஸவ விதி



உத்தர காமிக மஹாதந்த்ரத்தில் மஹோத்ஸவ விதியாகிற ஆறாவது படலமாகும்




ஆறாவது படலத்தில் மஹோத்ஸவ விதியாகும். அதில் முதலாவதாக த்வஜாரோஹணா வரோஹாந்தகிரியை உத்ஸவம் என உத்ஸவ என உத்ஸவ ஸ்வரூப விவரணம். பிறகு த்வஜாங்குரம் த்வஜாங்கமாகும். ஆகையால் அந்த அங்க கிரியையை த்வஜாரோஹபூர்வம் செய்ய வேண்டும். என த்வஜாங்குரகர்மா சூசிக்கப்படுகிறது. பின்பு தீர்த்த நட்சத்ர திதி நிச்சயித்து த்வஜாரோஹணம் ஆரம்பிக்க என கூறி தீர்த்த நட்சத்ர பிரகாரம் கூறப்படுகிறது. பின்பு அதிவாசத்திற்கு முன்பாக கொடி ஏற்றுக என கூறி த்வஜாதிவாஸவிதி பிரதிபாதிக்கப்படுகிறது. அதில் த்வஜபடலக்ஷணம் த்வஜபடத்தில் விருஷபாதி லேகன பிரகாரம் நயனோன்மீலனம் வ்ருஷபயாக காரணம் கூறப்படுகிறது. அந்த சமயம் காலையில் த்வஜபடம் பூஜித்து அதை திரிசூல ஸஹிதம் தேவேச சஹிதம் அல்லது தேவேச வியுக்தமாகவோ, படிசட்டம், பல்லக்கிலோ ஆரோஹித்து பல ந்ருத்த வாத்யஸஹிதமாகி க்ராம ப்ரக்ஷிணம் செய்து ஆலயப்ரவேசம் செய்க என கூறி பிறகு த்வஜாரோஹ தினத்திலோ, அதிவாஸ தினத்திலோ த்வஜதண்டம் ஸ்தாபிக்க என்று கூறி த்வஜதண்ட ஸ்தாபன பிரகாரம் நிரூபிக்கப்படுகிறது. அதில் த்வஜதண்டப்ரமாணம், த்வஜதண்டவ்ருக்ஷ, த்வஜயஷ்டி, ஸம்பாதநக்ரமம், ஸ்கந்தவலய பிரகாரம், ரஜ்ஜுஸம்பாதந த்வஜதண்ட ஸ்தாபன விஷயம், கிரியா நிரூபணம், த்வஜ தண்ட ஸ்தாபன யோக்யஸ்தான தண்டமூலத்தில் வேதி கல்பன பிரகாரம் இவ்வாறான விஷயங்கள் கூறப்படுகிறது. பிறகு த்வஜா ரோஹந விதி பிரதிபாதிக்கப்பட்டு அதில் முடிவாக த்வஜாரோஹணம் முதல் த்வஜாரோஹவஸாநம் வரை ஏககாலம், திவிகாலம், திரிகாலமோ, விருஷபத்தை பூஜிக்க என கூறப்படுகிறது. பிறகு பேரீதாடநவிதி கூறப்படுகிறது.
அங்கு பேரீதாடனம் விதிப்படி ராத்ரியில் செய்ய வேண்டும் பேரீதாடநப்ரகாரம், அக்காலத்தில் வினியோகிக்கிறராகதாளாதி பிரயோஜநம் நிரூபிக்கப்படுகிறது உத்ஸவம், பேரீதாடன பூர்வம், த்வஜ பூர்வம் அங்குரார்ப்பணபூர்வம் என திரிவிதமாகும் என கூறி அன்று மூன்று விதத்திலும் செய்யக் கூடிய கிரியா விசேஷம் கூறப்படுகிறது. யாகசாலை நிர்மாண பிரகாரம், வேதிகா ஸ்தண்டில கல்பனபிரகாரம், கும்பஸ்தாபனவிதி, அஷ்டமங்கல, தசாயுத ஸ்தாபன விதி இவ்வாறான விஷயம் கூறப்படுகிறது. பின்பு ரக்ஷõபந்தன விதி கூறப்படுகிறது. ஸூத்ர லக்ஷணம் பஸ்மாதார பாத்ரத்தில் ஸூத்ரந்யாஸ பிரகாரம் தேவதேவியின் ரக்ஷõபந்தனத்தின் விசேஷ நிரூபணம், தசாயுதங்களின் ரக்ஷõபந்தனவிதி இவ்வாறாக விஷயங்கள் சிறப்பாக பிரதிபாதிக்கப்படுகிறது. பிறகு யாகாரம்பத்தின் முன்தினம் அல்லது அந்ததினத்திலோ தீர்த்தாங்குரார்பணம் செய்ய வேண்டுமென தீர்த்தாங்க கர்மா சூசிக்கப்படுகிறது. பிறகு ஹோமவிதிமுடிய செயற்பாலது எனக்கூறி பலிதான விதி விளக்கப்படுகிறது. பின்பு யாகசாலையில் விதிக்கப்பட்ட பூஜாவிதி, ஹோமவிதி நிரூபிக்கப்படுகிறது. பிறகு ஹோமமுடிவில் அல்லது ஹோம ஆரம்பத்திலோ ஹவிஸ் கொடுக்க வேண்டுமென ஹவிஸ்தான விதி கூறப்படுகிறது. ஹோம விதி முடிவில் பலிதானம் செயற்பாலது என்று பலிதான விதி விளக்கப்படுகிறது. நவதின உத்ஸவ விஷயத்திலுமே 12 தின உத்ஸவ விஷயத்திலும் தின தேவர்களின் பலிதிரவ்யங்களின் விசேஷ நிரூபணம் காணப்படுகிறது.
முடிவில் காலை மாலை பலிகொடுக்கவும் என்று பலிதான காலம் நிரூபிக்கப்படுகிறது. பிறகு பலிதான முடிவில் பலிகாலத்திலோ பேரயாத்ரை செய்தல் வேண்டுமென கூறி பேரயாத்ரை பிரகாரம் விசேஷமாக நிரூபிக்கப்படுகிறது. அதில் வாஹன விதி பேரக்ரமம் இத்யாதி விஷயம் பிரதிபாதிக்கப்படுகிறது. முடிவில் பிரதி தினம் உத்ஸவ காலத்தில் பகலிலும், இரவிலும் பேரயாத்ரை செய்ய வேண்டுமென கூறப்பட்டுள்ளது யாநத்தின் முடிவில் தேவர்க்கு அவசியம் ஸ்நபனம் செய்ய வேண்டுமென கூறப்படுகிறது. மிருக யாத்திரையில் விசேஷமாக செய்ய வேண்டும் என சூசிக்கப்படுகிறது. பின்பு ரதாரோஹவிதியில் விசேஷம் பிரதிபாதிக்கப்படுகிறது. யாககாலத்தில் மழை முதலானவை ஸம்பவித்தால் செய்யக்கூடிய பிராயச்சித்த விதி நிரூபிக்கப்படுகிறது. பின்பு தீர்த்த திதியின் முன்பு ஐந்து நான்காம் தினத்தில் தைலாப்யஞ்ஜநம் ஆசரிக்கவும் என கூறி அப்பயஞ்சன விதி கூறுகிறார். பின்பு தீர்த்த திவஸ முன்தினம் செய்யக் கூடிய நடேசப்ரமண விதி நிரூபிக்கப்படுகிறது. பிறகு ஆசார்ய திருப்திக்காகசெய்ய வேண்டிய யாத்ராதான விதி நிரூபிக்கப்படுகிறது. ஆசார்ய சிவ வித்யாச தர்சனத்தில் அதோகதி பிராப்தி அடைவான் என்கிறார். பின்பு தீர்த்தோத்ஸவ விதி பிரதிபாதிக்கப்படுகிறது. சூர்ணோத்ஸவ முறையும் விதிக்கப்படுகிறது. பிறகு ஸமுத்ராதிகளான மஹாஜலத்தில் மஹாதீர்த்தம் செய்ய வேண்டும் என மஹாதீர்த்த விதி கூறுகிறார். பிறகு த்வரோஹண நிரூபிக்கப்படுகிறது. பின்பு அங்குரார்ப்பணம். துவஜாரோஹணம், ஹோம ஆரம்பம் நிருத்தமூர்த்தி உத்ஸவம், தீர்த்தம் சுத்த ஸ்நபனம் காலம் ஆகிய சமயங்களில் ஆசார்யனுக்கு வஸ்த்ர ஹேமாங்குலீயம் கொடுத்து பூஜிக்க வேண்டும். பிறகு ஆசார்ய தட்சிணை விஷயத்தில் உத்தம, மத்யம கந்ய ஸ்க்ரமம் நிரூபிக்கப்படுகிறது.
பின்பு பக்தோத்ஸவ விதி கூறப்படுகிறது. பிறகு ஸம்வத்ஸரோத்ஸவ காலத்தில் மாஸோத்ஸவ காலமேற்பட்டால் மாஸோத்ஸவவிதி பிரகாரம் சுருக்கமாக செய்யுமான பிரதிபாதிக்கப்படுகிறது. ஒரு தின உத்ஸவ விதி சூசிக்கப்படுகிறது. அதில் ஏகாஹோத்ஸவம் கர்த்தா இச்சையால் விருப்பப்பட்ட காலங்களில் செய்ய கூறி க்லுப்தககாலங்கள் கூறப்படுகிறது வாரபூஜை பிரதிபாதிக்கப்படுகின்றது. அதில் பிரதிவாரம் உபயோகிக்க வேண்டிய பத்ரங்கள் ரத்னங்களும் நிரூபிக்கப்படுகிறது. வாரோத்ஸவவம் ஆசரிக்க வேண்டும் என கூறி வாரோத்ஸவ கூறப்படுகிறது. ஸாமாந்யமாக உத்ஸவ விஷயத்தில் த்வஜத்தில் த்வஜமின்றியும் விருஷபத்வஜமே செயற்பாலது. இவ்வாறாக சிவோத்ஸவத்தில் த்வஜாரோஹணம் செய்த சமயத்தில் மற்ற தேவதைகளுக்கு த்வஜா ரோஹணம் செய்யக் கூடாது என்றும் செய்யக்கூடியவை கூடாதவை என விசேஷ விதி கூறப்படுகிறது. இங்கு வத்ஸரம், சவுரம், சாந்திரம், என இரண்டு விதம், அதில் சவுரம் சிரேஷ்டம், சாந்த்ரம்மத்யமம், ஸாவநம் என்ற பிரிவு அதமம் என கூறப்பட்டுள்ளது. உத்ஸவ விஷயத்தில் வேறுவிதமாக பூஜாகிரியை தொகுப்பு பிரதிபாதிக்கப்படுகிறது. முடிவில் த்வஜம் பன்னிரெண்டாவதாண்டின் முடிவில் செயற்பாலது என்கிறார். ஜீர்ணதோஷம் ஏற்பட்டால் வேறு த்வஜம் ஏற்படுத்தவும் என்று கூறியுள்ளது. இவ்வாறாக ஆறாவது படல கருத்து ஆகும்.
1. உரிய முறைப்படி உத்ஸவத்தை பற்றி சொல்லப்போகிறேன். கொடியேற்றுவது முதல் கொடி இறக்குவது வரை உள்ள செயல் உத்ஸவம் ஆகும்.
2. த்வஜ அங்குரம் த்வஜத்திற்கு அங்கமாகும். அந்த அங்குரத்தை கொடியேற்றுவதற்கு முன்பு செய்ய வேண்டும். ஆகையால் அதற்கு முன்பு தீர்த்த நட்சத்திரத்தை நிர்ணயித்து அதற்கு முன் தினத்திலே அங்குரம் செய்ய வேண்டும்.
3. இரட்டைப்படை நாளிலோ அல்லது அந்த நாளிலோ த்வஜாரோஹணம், செய்ய வேண்டும். எல்லா மாத நட்சத்திரம் எல்லா மாதத்திலும் உள்ள திருவாதிரை நட்சத்திரத்திலும்
4. அரசர்களின் பிறந்த நாள், நினைவு நாள் பட்டாபிஷேக நட்சத்திரம் மற்றும் மாசிமாத ஷஷ்டி வரையில் மற்ற எல்லா மாதங்களில் பவுர்ணமி வரையில்
5. விஷுவ புண்யகாலம், தட்சிணாயாண உத்தராயண காலம், சந்திர சூர்ய கிரஹண காலத்திலும் தீர்த்த நட்சத்திர தினத்தாலும் ஐந்து நாளிலும் அஷ்டமியிலும் மற்ற தீர்த்தநட்சத்திரம் வரையிலுமோ
6. முப்படை இரட்டைப்படை, அல்லது அந்த நாளிலோ பகலிலோ இரவிலோ, அதிவாஸன பூர்வமாக த்வஜத்தை ஆசார்யன் ஏற்ற வேண்டும்.
7. ஐந்தும் முழம் முதல் பதினான்கு முழம் வரையில் த்வஜத்தின் அளவாகும். இது தலையிலிருந்து அடிபாகம் வரை உள்ள அளவாகும்.
8. இரண்டும் சேர்ந்த அளவு நான்கு முதல் ஏழுவரை ஆகும். அவைகளைப் பிரிந்து ஒரு பாகம் கொடித்துணியின் பரப்பளவு என்று சொல்லப்படுகிறது.
9. அகல அளவின் சமமாகவோ முக்கால் பாகமாகவோ பாதிபாகமாகவோ ஆகும். அகலத்தின் பாதி அளவு தலை பாகமாகும். இரு வாலுடன் கூடியதாக இருக்க வேண்டும்.
10. இரண்டு குச்சியுடன் கூடியதாக அதன் நடுவில் விருஷபத்தை எழுத வேண்டும். நிற்பது போலவோ படுத்திருப்பது போலவோ எழுதலாம். ஆயம் என்ற அளவு முதல் சுபம் என்ற அளவு வரையிலுமோ உள்ளதாகி வரையவேண்டும். ஆயம்: கர்த்தாவின் நட்சத்திரம், வாஸ்த்து நட்சத்திரம் ஸ்வாமியின் நட்சத்திரத்தை சார்ந்து கணக்கிடுவதாகும்.
11. விருஷபம் வெள்ளை சிகப்பு நிறமாகவோ மஞ்சள் நிறமுடைய வாலும் சிவப்பு நிறமுள்ள கொம்புகள் குளம்புகள் இவைகளோடு கூடியதாக விருஷபம் இருக்க வேண்டும்.
12. கிராமத்தின் முக்கிய வீதி வழியாக வலம் வரும் பொழுது கிராமத்தை எதிர்நோக்கியதாக அமைக்க வேண்டும். ஐந்து முதல் முப்பத்தாறு அளவுள்ள மாத்ராங்குல தன்மையோடு கூடியதும்.
13. ஜாதி அம்சங்களோடு கூடியதும் மூன்று வர்ண கண்களோடு கூடியதும் எல்லா லக்ஷணங்களோடு கூடியதும் தங்க மாலையோடு கூடியதும் அந்த விருஷபம் இருக்க வேண்டும்.
14. கொடிமரம் மானாங்குலத்தாலும், விருஷபம் மாத்ராங்குலத்தாலும் செய்ய வேண்டும். கொடிபட விருஷபம் பத்மாஸனத்தோடு கூடியதாகவும் பக்கத்தில் இரண்டு தீபத்துடன் கூடியதாகவும்
15. இரண்டு சாமரங்களோடு கூடியதாகவும் குடையின்கீழ் தலை உடையதாகவும் பூர்ண கும்பத்தோடு கூடியதாகவும் அல்லது திரிசூலம் இதனோடு கூடியதாகவும்
16. இவ்விதம் விருஷபத்தை எழுதி கண்திறந்து சிவனுக்கு எதிரிலோ மண்டபத்திலோ அஸ்திர ஜலத்தால் பிரோக்ஷித்து
17. இரண்டு ஸ்தண்டிலங்களோடு கூடிய இடத்திலோ மனதைக் கவரும் வேறு இடத்திலோ பாத்திரத்தை முக்காலியின் மேல் உள்ள ஸ்தண்டிலத்தில் வைக்க வேண்டும்.
18. கொடி மற்றும் புதிய குடம், வஸ்த்ரம், கூர்ச்சம், ஸ்வர்ணம் ரத்னம், இவைகளோடு கூடியதும் நூல் சுற்றப்பட்டதும் நடுவில் விருஷபத்தை உடையதாகவும் இருக்க வேண்டும்.
19. அதே போல் வஸ்திரம் கூர்ச்சம் மாவிலை இவைகளோடு கூடிய கலசங்கள் எட்டு திக் பாலகர்களுக்காக விருஷப கும்பத்தை சுற்றிலும் வைக்க வேண்டும்.
20. ஆதார சக்தியாதி பூஜை செய்ய வேண்டும். விருஷப ஆசனம் கொடுத்து தர்மாதிகளை பூஜை செய்ய வேண்டும். ஓம் ஹாம் வ்ருஷபாஸநாய நம:) என்று கூறி பூஜிக்க வேண்டும்.
21. ஓம் ஹாம்வ்ரும் வ்ருஷப மூர்த்தயே நம: என்ற மந்திரத்தால் ஆவாஹணம் செய்ய வேண்டும்.
22. மேலே பஞ்ச பிரும்மங்களை பூஜித்து மூலமந்திரத்தால் பூஜிக்க வேண்டும். முறைப்படி ஹ்ருதயம் முதலிய மந்திரங்களை முறையாக பூஜிக்க வேண்டும்.
23. தத்வ தத்வேச்வரர்களோடும் மூர்த்தி மூர்த்தீச்வரர்களோடும் ஆவாஹணம் முதலியவைகளை செய்து விருஷப மூலமந்திரத்தால்
24. விருஷப காயத்திரியாலும் முறையாக நடுவில் பூஜை செய்து சந்தன, புஷ்பங்களால் அர்ச்சித்து சுற்றிலும் லோகபாலகர்களை பூஜை செய்யவேண்டும்.
25. முன்பே அமைக்கப்பட்ட குண்டத்திலோ ஸ்தண்டிலத்திலோ நிரீக்ஷணம் முதலிய ஸம்ஸ்காரங்களால் பரிசுத்தம் செய்து சிவாக்னியை ஸ்தாபிக்க வேண்டும்.
26. அதற்கு நடுவில் விருஷபத்தை ஆவாஹனம் செய்து ஸமித்து, நெய், அன்னம், இவைகளால் 108 ஆஹுதிகள் செய்ய வேண்டும்.
27. தத்வ தத்வேச்வரர்களையும் பூஜை செய்து ஹோமம் செய்து மூலமந்திர ஹோமம் முடிந்தவுடன் எல்லா பலன்களையும் தரக்கூடிய பூர்ணாஹுதியைச் செய்ய வேண்டும்.
28. சந்தனம் புஷ்பம், இவைகளால் பூஜை செய்து படத்திலுள்ள விருஷபருக்கும் குடத்திலுள்ள விருஷப தேவருக்கும் வெண்பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும்.
29. காலையில் சந்தனம் புஷ்பம் முதலியவைகளால் பூஜை செய்து முறையாக உபசாரம் செய்து தாம்பூலம் முதலியவைகளை விருஷப தேவர்க்கு ஸமர்ப்பணம் செய்ய வேண்டும்.
30. பூர்ணாஹுதி செய்த பிறகு எல்லா மங்கள வாத்யங்களோடும் நடனம் வாத்யம் இவைகளோடு கூடியதாக
31. கேடயத்திலோ, பல்லக்கிலோ, விருஷப கொடியை (அஸ்த்ரதேவர்) திரிசூலத்தோடும் இறைவனோடும் அல்லது அல்லாமலும்
32. கிராம பிரதட்சிணம் முதலியவைகளை செய்து ஆலயத்தில் பிரவேசம் செய்து எல்லா லக்ஷணங்களோடும் கூடியதாக த்வஜ தண்டத்தை ஸ்தாபனம் செய்ய வேண்டும்.
33. (கொடிமரத்தை திவாஜாரோஹண தினத்திலோ) அல்லது அதிவாச தினத்திலோ ஆலய உயர சமமாகவோ, அல்லது அதன் இரண்டு, மூன்று மடங்குகளாகவோ ஸ்தாபிக்கவும். ஆறு, ஏழு, எட்டு, முழு அளவுள்ள தண்டம் அதமமாகும்.
34. ஒன்று முதலான தளம் வரையிலோ, கோபுரம் வரையிலோ பதினொன்று இருபத்திரண்டு கை அளவு உயரம் உள்ளதாகவோ நடுநிலையான கொடி அமைத்து கொடியிலும் கடைநிலையான கொடியிலும் தரையில் புதைத்ததாகவோ புதைக்காததாகவோ அமைக்கலாம்.
35. சூலங்களுக்கு கூறிய எல்லா விருக்ஷத்தினாலுமோ பட்டைகளின் ஸாரம் இவைகளையுடைய பாக்கு மரம் முதலியவைகளின் மரங்களாலோ
36-37. புரசு, கருங்காலி, அரசு, ஆல், சந்தனம், முதலியவைகள், சால விருக்ஷம் இலுப்பை, பனை, மா, மூங்கில், ஜாதி மரங்கள், வன்னி, வில்வம் முதலியவைகள்.
38. சம்பகம் ஆகிய இந்த விருக்ஷங்களால் பதினாறு, இருபத்தினான்கு முழ அளவுள்ளதாகவோ ஸ்வபாவமான நீளத்துடன் மரப்பட்டையுடன் கூடியதாகவும்.
39. த்வஜதண்டம் சொல்லப்பட்ட பிறகு, த்வஜயஷ்டி சொல்லப்படுகிறது. இரண்டு பாகம் முதல் ஒன்பதின் ஒரு பங்கு வரையிலாக தண்டத்தின் நீளம் கூறப்படுகிறது.
40. ஒரு அம்சத்தில் த்வஜ யஷ்டியை சிறந்தவர்கள் செய்ய வேண்டும். ஐந்து அங்குலம் முதல் பதினாறு ஒவ்வோர் அங்குலமாக பதினாறு அங்குலம் வரையிலுமாக
41. எவ்வளவு நீள அளவு உள்ளதோ அந்த அளவில் உபதண்டம் கல்பிக்கவும். ஐந்தம்சத்திலிருந்து பன்னிரண்டு அம்சம் வரை அடிபாகத்தின் அளவாகும்.
42. ஒரே அம்சத்தால் குறைவான அளவு தண்டத்தின் நுனியாகும். இந்த அளவே தண்ட நுனியாகும். மூங்கில் மரம், த்வஜ தண்டத்தின் மரங்களால் த்வஜயஷ்டி அமைக்கலாம்.
43. இரண்டையும் சேர்ப்பதற்கு மூன்று (ஸ்கந்தங்களை) வலயங்களை செய்ய வேண்டும். இரண்டு வலையங்கள் பன்னிரண்டு அங்குல அளவுள்ளதாக இருக்க வேண்டும்.
44. முப்பத்தாறு மாத்ராங்குல அளவு வரையில் கழுத்து (ஸ்கந்த) வலைய நீளத்தை செய்ய வேண்டும். ஏழு அங்குலம் முதல் இருபத்தினான்கு அங்குலம் வரை உள்ளதாக இருக்கவேண்டும்.
45. ஸ்கந்த விஸ்தாரம் கூறப்பட்டு அதன் நுனி, கழுத்து அடிபாகத்தில் மூன்று பாகமாக பாதியிலோ அல்லது மூன்று பகுதியிலோ முக்கால் பங்காகவோ தர்வீ என்ற கரண்டியைப் போல செய்யலாம்.
46. நான்கு மூன்று, இரண்டு என்ற அங்குலத்தில் இதற்கு அளவு சொல்லப்பட்டது. ஆறு, ஏழு, எட்டு என்ற அளவில் தண்டத்திற்கு மண்ணினாலோ பீடம் செய்யலாம்.
47. மூல அக்ரங்களில் திவாரம் கூடியதும் தண்டயஷ்டிக்கு இணையானதும் பாதி வளைவு உள்ள வலயம் வளையும் உள்ளதாகவும் முடிவில் யஷ்டியின் நுனி பிரதேசத்திலும்
48. தண்ட ஓரத்திலோ அல்லது ஸ்கந்தத்திலோ வலயம் இருக்க வேண்டும். பெரிய பிளவுகளாக மூன்று கிளைகள் போல் முக்கால் பங்கு அளவில் இருக்க வேண்டும்.
49. ஆறு அங்குலம் முதல் ஆறங்குல அதிகமான அளவுள்ளதாக தண்டத்தின் அடியில் உள்ள அளவுள்ளதாகி தண்டத்தின் மேலும் வலயம் இருக்க வேண்டும்.
50. அதில் வலையத்திற்கு மேல் யஷ்டியின் நுனி என்று சொல்லப்படும் பூமியில் புதைக்கும் அளவு தண்ட நுனி நீளமாக இருக்க வேண்டும்.
51. குறைந்த அளவினாலோ பூமியில் ஊன்றக்கூடாது. வல்யம், ஸ்கந்தம் இவைகள் தண்டத்தின் நுனி வரையில் இருக்கும்படி நடவேண்டும்.
52. இருபத்தைந்து மாத்திரைகள் முதல் மூன்று மூன்று அங்குலம் வளர்ச்சியால் இரண்டு மடங்காகவும் செய்யலாம். பூமியின் அளவுவரை இருப்பதாகவும் உள்ள அளவு பூமிக்குள் புதைப்பதின் அளவாகும்.
53. ஒரு அங்குலம் முதல் கால், கால், மாத்ராங்குல அளவாக வளர்ச்சி அடைந்து மூன்று மாத்திரை அங்குலம் வரையில் உள்ள வலயம், மற்றும் கீலம் இவைகளோடு கூடியும்
54. வளையத்தின் இடைவெளியானது வலயத்தின் தகுந்த பலம் உள்ளதாக இருக்கவேண்டும். கயிறு வலயத்தின் நடுவில் இருக்கும், இரண்டங்குலம் முதல் அதிகரிக்கப்பட்ட கயிறு அளவு கனத்துடன் கூடியதாக அமைய வேண்டும்.
55. த்வஜாரோஹணத்திற்கு ஏற்ற நீளம் உடையதாக கயிறு இருக்க வேண்டும். கொடிப்பட கயிறு பலமான முப்பிரி உள்ளதாக இருக்க வேண்டும். இல்லாவிடில் கட்டுவதற்கு தகுதியானதாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
56. இவ்விதம் கயிறை தயார்செய்து த்வஜ தண்டத்தை சுத்தி செய்து தர்பை கயிறு, தர்பை, மற்றும் மாலைகளால் மேலிருந்து முறையாக சுற்றவேண்டும்.
57. நூறு தர்ப்பைகளால் ஆன கூர்ச்சத்தை யஷ்டியின் நுனியில் வைக்க வேண்டும். அஸ்த்ர மந்திரத்தால் பிரோக்ஷித்து சிவதத்வமாக நியாஸம் செய்ய வேண்டும்.
58. தண்டத்தை மூன்றாக பிரிக்க வேண்டும். மூன்று பிரிவிலும் நுனி முதலாக சிவதத்வ தத்வாதி பத்ரயங்களை பூஜிக்க வேண்டும். ஸ்கந்த திரயத்தில் சிவதத்வ தத்வாதிகளை அர்ச்சிக்க வேண்டும். வலயத்தில் சூர்யனை பூஜிக்க வேண்டும்.
59. தண்டநாயகனான சிவனுக்கு கயிறு சக்தியாகும். சந்தனம் முதலியவைகளால் பூஜிக்க வேண்டும். பிறகு பிரதிஷ்டை ஆரம்பிக்க வேண்டும்.
60. ரத்னந்யாஸம் தண்டமூர்த்தியனடியில் செய்ய வேண்டும். தேவாலயத்திற்கு எதிர்நோக்கியது போல் தங்கம் முதலியவைகள் குண்டுமணி எடை முதல் பவுன் எடை வரை வைக்க வேண்டும். ஆமையையோ, விருஷபத்தையோ பிரதிமையாக தண்டத்தினடியில் வைக்க வேண்டும்.
61. தண்டத்தின் அடிப்பாகத்தில் அந்தந்த மந்திரங்களால் அதோமுகமாக அர்ச்சிக்க வேண்டும். யஷ்டி நுனி பாகத்திலிருக்கும்படி தண்டத்தை ஸ்தாபிக்க வேண்டும்.
62. தேவாலயத்தை நோக்கி விருஷபத்தின் எதிரிலோ அல்லது பக்கமோ அப்படியே கோபுரத்திற்கும் மஹாமண்டபத்திற்கு அருகிலோ ஸ்தாபனம் செய்ய வேண்டும்.
63. உள்ளே உள்ள மண்டலத்திலும் பிரகாரத்தின் ஆதியிலும் கோபுரத்தின் நடுவிலேயும் ஒன்பது, ஐந்து, என்ற முறையில் எட்டு திசையில் அல்லது நாலு திக்குகளில் உள்ளவாறு ஸ்தாபிக்க வேண்டும்.
64. முன் உளது பிரதானமாகும். கொடிகள் எட்டு எண்ணிக்கை உள்ளதாய் இருக்கும். வித்யேஸ்வரர்களாகவும் நான்காக இருப்பின் தத்புருஷர்கள் அதிபதிகளாவர்.
65. தண்டாதிபர்கள் இவ்விதம் சொல்லப்பட்டார்கள். த்வஜபடத்தில் விருஷபம் அதிபதி தண்டத்தின் அடியில் வேதிகை இருக்க வேண்டும். அது பலவிதமாகும்.
66. ஒரு முழம் முதல் மூன்று, மூன்று அங்குலமாக இரண்டு முழம் வரையில் வேதிகை அளவு கூறப்படுகிறது.
67. கொடியின் சமமான உயரமுடையதும் அல்லது முக்கால் பங்கோ எட்டு, ஏழு, ஐந்து, நான்கு மூன்று என்று அம்சங்கள் உடையதாகவும் அல்லது அதில் பாதியாகவோ வேதிகை சொல்லப்பட்டது.
68. மூன்று மேகலைகளோடு கூடியதாக வேதிகை இருக்க வேண்டும். ஒவ்வொரு மேகலையும் எட்டு அங்குல அளவுள்ளதாகவோ அல்லது இரண்டு மூன்று, அங்குலம் குறைந்த அளவுள்ளதாகவோ மேகலை அளவு இருக்கவேண்டும்.
69. மேகலை இல்லாத பீடத்தில் அடியில் உபவேதிகை அமைக்கவேண்டும். இரண்டு அங்குலம் முதல் கால் அங்குலம் அதிகரித்ததாக அல்லது ஆறு அங்குலம் வரை இருக்கலாம்.
70. கால், அல்லது பாதி அல்லது முக்கால் அளவு உயரம் இருக்க வேண்டும். வேதிகைக்கு மேல் நான்கு அங்குல அளவில் தாமரை செய்ய வேண்டும்.
71. ஐந்தங்குலம் முதல் பதினெட்டு அங்குலம் வரையில் தாமரையின் உயரமாகும். விஸ்தாரம் வேதிகைக்கு சமமாகவும் இருக்கவேண்டும்.
72. ஒவ்வொரு அங்குல அளவினால் பதினொன்று அங்குலம் அளவு வரையில் கர்ணிகைகளோடு கூடியதாக பத்மம் இருக்க வேண்டும். பத்ம அமைப்புக் கூறப்பட்டது.
73. கர்ணிகை தண்டத்திலிருந்து ஒரு அடி வெளிவந்ததாக இருக்க வேண்டும். மூன்று அங்குலம் வரையில் இதன் உயரம் இருக்கலாம்.
74. நான்கு அல்லது எட்டு பத்து தளமாகவும் அல்லது வட்ட வடிவமாகவும் நாற்பட்டையாகவும் தளசுற்று இருக்க வேண்டும்.
75. அப்படியே உபதளங்களோடும் அல்லது இல்லாமலும் இருக்கலாம். இவ்விதம் பீடத்தை செய்து சில்பியை திருப்தி செய்ய வேண்டும்.
76. புண்யாகவாசனம் செய்து வேதிகையை அஸ்திர மந்திரத்தால் புரோக்ஷித்து செய்து தர்பையினால் த்வஜதண்டத்தை சுற்றி (விருஷ கும்பம், படம்,)
77. திரிசூலம் மங்கள அங்குரம் இவைகளோடு கூடிய விருஷபகும்பத்தையும் படத்தையும் பிரதட்சிண முறையாக தண்டத்திற்கு எதிரில் கொண்டு வரவேண்டும்.
78. ஆதாரசக்தி அனந்தன் முதலியவர்களை கூர்மாசனத்தில் பூஜிக்க வேண்டும். கோணங்களின் தர்மம் முதலியவைகளையும் நடுவில், அதர்மம் முதலியவைகளையும் பூஜை செய்ய வேண்டும்.
79. எட்டு தளங்களில் வாமை முதலியவர்களை பூஜிக்க வேண்டும். கர்ணிகையில் மனோன்மணியை பூஜிக்க வேண்டும். தண்டத்தில் ஸதாசிவ பெருமானையும் சந்தனம் புஷ்பத்தால் பூஜை செய்யவும்.
80. பாத்யம், அர்க்யம், ஆசமனமாகிய மூன்று வகைகளோடு கூடிய ஸ்நபன முறையில் கூறப்பட்ட முறைப்படி பூஜை செய்து
81. விருஷப படத்தை விருஷப காயத்ரி மந்த்ரம் சொல்லி கயிற்றால் கட்டி சிறிய மணியை கட்டி அஸ்திர மந்திரத்தை சொல்லிக் கொண்டு
82. கும்பத்திலிருந்து பீஜத்தை எடுத்து விருஷபத்தை தியானித்துக் கொண்டு ஆசார்யன் விருஷபத்தின் ஹ்ருதயத்தில் விருஷப பத்திரத்தை வைத்து சந்தனம் புஷ்பம் முதலியவற்றால் பூஜிக்க வேண்டும்.
83. விருஷப மூலத்தால் ஆசார்யன் விரைவாக கொடியை ஏற்ற வேண்டும். அல்லது முதலில் தொட்டு விட்டு மற்றவரைக் கொண்டு ஏற்றச் சொல்லலாம்.
84. கீழ்நோக்கியதாக விருஷபமிருப்பின் பூமியின் திருப்தியையும் அரசனுக்கு அமைதியையும் கொடி மேல் நோக்கியதாக இருப்பின் தேவர்களின் திருப்திக்காகவும் அரசனின் வெற்றிக்கும் ஆகும்.
85. கொடி செல்லும் திசை மேற்கு, வடக்கு, ஈசானம், கிழக்கு நோக்கி இருக்குமேயானால் நன்மை கிடைக்கும். ÷க்ஷமம், ஆரோக்யம் வெற்றி புஷ்டி இவைகள் முறையான பலன் ஆகும்.
86. அக்னி கோணத்தில் கொடி செல்லுமானால் ஜ்வரம் அல்லது வருத்தம், மரணம், நோய் முதலியன உண்டாகும். வாயு திக்கில் சென்றால் பயம் உண்டாகும். வாலிற்கும் இந்த பலன் உண்டு.
87. கொடி ஏற்றும் பொழுது ஆசார்யன் குறைவினால் தடங்கல் ஏற்படுமானால் அதற்கு சாந்தியை அகோரமந்திரத்தை ஸ்மரித்து செய்ய வேண்டும்.
88. நூற்றெட்டு ஆஹுதி பிரம்ம மந்திரங்களால் ஸமித், நெய், அன்னம், முதலியவைகளோடு ஹோமம் செய்து விருஷப கும்ப தீர்த்தத்தால் தண்டமூலத்தை பிரோக்ஷிக்க வேண்டும்.
89. கிழக்கு முதலான திக்குகளில் உள்ள தளங்களில் அஷ்டவித்யேச்வர்களை பூஜித்து அந்தந்த தீர்த்தங்களால் அந்தந்த தளங்களில் உள்ள வித்யேஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
90. சந்தனம் புஷ்பங்களால் அர்ச்சித்து பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். புண்யாகம் முதல் நைவேத்யம் வரையில்
91. எல்லா சிறப்பு வாத்யங்களோடும் கூடியதாகவும் பாடலோடு கூடியதாகவும் நான்கு திக்குகளில் நர்த்தனம் செய்யவும். அதிலும் சிறப்பான சுத்த நர்த்தனம் சொல்லப்படுகிறது.
92. அதன் பிறகு தீர்த்தம் வரையில் (கொடி இறக்கும் வரையில் ஒருகாலம், இரண்டு காலம், மூன்று காலமோ விருஷபத்தை பூஜை செய்ய வேண்டும்.
93. எங்கு எந்த நாட்டில் (த்வஜாரோஹணம் செய்யப்படுகிறதோ) த்வஜயஷ்டி வைக்கப்படுகிறதோ அங்கு அகால மரணம் ஏற்படாது. செல்வம் கிடைக்கும் பாபம் செய்கிறவர்களிடத்தும் இவைகள் ஏற்படும்.
94. திருட்டு பயம் முதலியன ஏற்படாது. அவமானம் கலக்கம், ஏற்படாது. மாறுபட்ட கருத்து உடையவர்கள் கூட சமாதானம் அடைவார்கள். நோயாளிகள் கூட குணமாகி விடுவார்கள்.
95. மேகங்கள் தக்க காலத்தில் மழை பொழியும் அரசனுக்கு வெற்றி உண்டாகும். சுபிக்ஷம் ஏற்படும் எல்லா உயிரினங்களும் (எல்லா பாபங்களும்) பசுக்கள் நன்கு பால் கொடுக்கும்.
96. செய்நன்றி மறந்தவன், பிராமணனைக் கொன்றவன் பசுவை கொன்றவன் போன்ற பாபங்களை ஒருவன் செய்திருந்தாலும் கொடியேற்றத்தை பார்ப்பதால் பாபம் நீங்கும். யஜமானுடைய இரண்டு குலமும் நன்கு விளங்க பலன் கொடுக்கும்.
97. இரவில் பேரீதாடனம் (பேரியை அடித்தல்) உரிய முறைப்படி செய்யப்படவேண்டும் தேவனுடைய ஸன்னிதியில் இரண்டு ஸ்தண்டிலங்கள் செய்ய வேண்டும்.
98. ஒரு பக்கத்தில் (ஸ்தண்டிலத்தில் ஒன்றில்) சூலத்தையும் மற்றொரு ஸ்தண்டிலத்தில் பேரியை வைக்க வேண்டும். சூலம், பேரி, இவைகளில் ஷடுத்தா ஸனம் பூஜை செய்ய வேண்டும்.
99. கிழக்கு மேற்காகவும் தெற்கு முகமுடையதாகவும் பேரியை வைக்க வேண்டும். புண்யாஹம் செய்து திரிசூலத்தில் தேவதையை பூஜை செய்ய வேண்டும்.
100. மத்ய பத்திரத்தில் ருத்ரன் வலது பத்திரத்தில் பிரம்மா இடது பத்திரத்தில் விஷ்ணு பாலிகையில் பார்வதி இவர்களை ஆவாஹனம் செய்ய வேண்டும்.
101. குடம் போன்ற பகுதியில் ஸ்கந்தனையும் அதன் முகப்பகுதியில் வினாயகரையும் தண்டத்தின் நுனியில் மன்மதனையும் தண்டத்தின் நடுவில் பாஸ்கரனையும் பூஜை செய்ய வேண்டும்.
102. தண்டத்தின் மூலபாகத்தில் சண்டேசர், கிழக்கு தளத்தின் நுனி பாகத்தில் லக்ஷ்மி, தெற்கு தளத்தில் ஸப்த மாதா மேற்கு தளத்தில் ஜ்யேஷ்டா தேவியையும்
103. வடக்கு திக்கில் காத்யாயினியும், சூலத்தின் அடிப்பகுதியில் பதினோறுருத்திரன், சூர்யன் பன்னிரண்டும் அஷ்ட வசுக்கள் அச்வினி தேவர்கள் இவர்களும் மற்றும் பதினெட்டு கணங்களையும்
104. முறைப்படி உபசாரம் செய்து வரவேற்பதாக செய்து பேரியில் அந்தந்த தேவதா ஆவாஹணம் செய்ய வேண்டும். பேரியை வஸ்திரத்தால் சுற்றி நடுவில் ருத்திரனை பூஜிக்க வேண்டும். (தோல் கயிற்றில்)
105. வலது பாகத்தில் பிரம்மாவையும், இடது பாகத்தில் விஷ்ணுவையும், வலயத்தின் தெற்கில் சூர்யனையும் வடக்கில் சந்திரனையும் பூஜிக்க வேண்டும்.
106. ஏழு கீலங்களில் ஸப்த மாதாக்களையும் ஒன்பது வலயங்களில் நவகிரஹங்களையும், ருத்திரர்களையும் அதன் எண்ணிக்கையில் பூஜை செய்து சர்ம ஸூத்திரங்களில் வாசுகியையும் பூஜை செய்ய வேண்டும்.
107. அடிக்கும் தண்டத்தில் ஷண்முகனையும் மஸ்தகத்தில் கிழக்கு பக்கமாக பூஜை செய்ய வேண்டும். சந்தனம் புஷ்பம், முதலியவைகளையும் நைவேத்யம் ஹிருதயமந்திரத்தால் தனித்தனியாக கொடுக்க வேண்டும்.
108. அஸ்த்ர மந்திரத்தை நினைத்து பேரிதாடனம் செய்ய வேண்டும். முதலில் ஒரு அடியும் இரண்டாவது இரண்டு அடியும் அடிக்க வேண்டும்.
109. மூன்றாவது முறை மூன்று முறை அடிக்க வேண்டும். மூன்று முறையும் ஒவ்வோர் அடியுமோ அடிக்க வேண்டும். வாசிப்பவனை பஞ்சாக்ஷரத்தை நினைத்து பிரோக்ஷித்து
110. வஸ்திரம், சந்தனம், மாலை, பூணூல் இவைகளை கொடுத்து, அவருடைய கையில் புஷ்பமும் கொடுத்து அஸ்திர மந்திரத்தை நினைத்து
111. பேரியில் புஷ்பத்தை வைத்து ஆசாரியனின் உத்தரவால் பேரியை கழுத்தில் வைத்துக் கொண்டு முறைப்படி எல்லா தாளத்தையும் அறிந்தவனாக வாசிக்க செய்ய வேண்டும்.
112. காந்தாரம் முதலிய ஸ்வரங்களோடும் ஸமதாளம் முதலிய தாளங்களோடும் கீதம், நிருத்தம் இவைகளோடும் அன்னலிங்கங்களோடு கூடியதும்
113. முறையாக மூர்த்திகளுடனோ அல்லது சண்டேசருடனோ அஸ்த்ரராஜரை குடை முதலிய உபசாரங்களோடு எழுந்தருளச் செய்து
114. தூபம் தீபம், மற்றும் மணி, சப்தம் முதலியவைகளோடு பிரம்ம ஸ்தானத்திலிருந்து நகர் வலம் வரவேண்டும்.
115. இந்திரனின் ஸ்தானத்திலிருந்து இந்திரனுக்கு பலிகொடுக்க வேண்டும் பலி தானத்தின் கடைசியில் தாளம், கீதம் இவைகளோடு கூடியதாகவும்
116. நர்த்தனத்தோடு கூடியதாகவும் அந்தந்த திக்குகளில் செய்ய வேண்டும். பிரம்மாவிற்கு பிரம்ம தாளம் மற்றும் மேகராக ஸ்வரத்துடனும்
117. ஸமதாளம், காந்தாரம், கொல்லிபக்தா பணம், ப்ருங்கிணீ, கவுசிகம், நட்டபாஷை, மல்லதாளம்,
118. ஸ்ரீ காமரம், நவதாளம், தக்கேசி, கோடிகம் தர்கராகம், சாலபாளனீஸ்வரம் டக்கரி முதலிய பலவகை ராகங்களோடும், தாளங்களோடும் பலிதானம் செய்யப்படவேண்டும்.
119. கிழக்கு முதலிய திக்குகளில் முன்னதாக முறைப்படி செய்யப்படவேண்டும். த்வஜாரோ ஹணத்தின் முன்னதாக உத்ஸவத்தில் முக்குணமான தினத்தில் செய்யப்படவேண்டும்.
120. பேரீதாடன பூர்வமான உத்ஸவமானால் அதுவே த்விகுணமாக எண்ணப்படும். தெய்வத்திற்கு எதிரில் நான்கு ஸ்தண்டிலும் செய்யப்படவேண்டும்.
121. முதலில் அஸ்த்ரமூர்த்தியும் அதன் எதிரில் த்வஜ படத்தையும் அதன் எதிரில் விருஷப கும்பத்தை வித்யேஸ்வர்களோடும்.
122. அதற்கு முன்னால் எல்லா லக்ஷணங்களோடு கூடிய பேரியை வைக்க வேண்டும். முறையாக இவர்களை சந்தனம், புஷ்பம், இவைகளை எல்லாம் வைத்து பூஜிக்க வேண்டும்.
123. பேரிக்கும் கும்பத்திற்கு நடுவில் ஸ்தண்டிலத்தில் ஹோமம் செய்யலாம். முன் சொன்ன முறையில் பூஜை செய்து தத்வங்களை நியஸிக்க வேண்டும்.
124. திரிசூலத்தில் தேவதாஹ்வானம் செய்ய வேண்டும். (தேவதாஹ்வானம்) பேரிதாடனம் செய்து விருஷபம் முதலியவர்களோடு திரிசூலத்தை எடுத்துக் கொண்டு
125. அன்னலிங்கம் மற்றும் வாத்யங்களோடு கூடவும் அந்தந்த தேவதாவாஹணங்களோடு கூடவும் கிராம பிரதக்ஷிணமாகச் செய்து
126. பலிதானம் முதலியவைகளையும் செய்து கொடியேற்றும் இடம் சென்று முன் சொன்ன முறைப்படி கொடி ஏற்ற வேண்டும்.
127. பேரீதாடன பூர்வாங்கமான இந்த முறை ராத்திரியில் செய்ய வேண்டுமென்று சொல்லப்பட்டது. கொடி சுற்றி வருதல் பகலில் செய்ய வேண்டும்
128. தேவதை ஆஹ்வான காலத்தில் விருஷப பிரமணத்தை விட்டு விட வேண்டும். பிறகு அங்குரார்பணம் இரவில் யாகாரம்ப தினத்தில் செய்ய வேண்டும்.
129. அதற்காக அங்குரார்பணம் செய்ய வேண்டும். கிராம பிரதட்சிணம் தீர்த்தாங்குரத்திற்கு அவசியமாகும்.
130. மற்ற எல்லாவற்றிற்கும் செய்தாலும் செய்யலாம். இல்லாமலும் இருக்கலாம். அங்குரார்ப்பணத்திற்கு முன்னதாக மாலையில்
131. மித்ஸங்க்ரஹணம் செய்து அங்குரங்கன் நன்கு முளைக்க பேரீதாடனுத்துடன் விதைகளை தெளிக்க வேண்டும்.
132. மற்றவை எல்லாம் அங்குரார்பண பூர்வமாக இரவிலேயே செய்ய வேண்டும். சிவனுடைய யாகாரம்பமும் அந்த இரவிலேதான்
133. இவ்விதம் நிச்சயம் செய்து முதல்நாள் அஸ்த்ரராஜரையும் பூஜிக்க வேண்டும். பிறகு யாக சாலையை எதிரிலோ அல்லது பக்கத்திலோ அமைக்க வேண்டும்.
134. இடது பக்கத்தில் அல்லது வலது பக்கத்தில் ஐந்து சாலைகள் உள்ள விருப்பமான இடத்தில் அமைத்துக் கொள்ளலாம். நடுவில் ஐந்து முழ அளவுள்ளதாக இருக்க வேண்டும்.
135. ஒரு முழம் முதல் பதினைந்து முழம் வரை அளவுள்ளதாக யாகசாலை அமைத்து மூன்று ஆவரணங்களோடு கூடியதாகவும் அல்லது ஐந்து ஆவரணங்களோடு கூடியதாயும்
136. சமமாகவோ அல்லது ஒவ்வொரு அங்குல அதிக அளவுள்ளதாக அதிகரித்து ஒன்பது அங்குலம் உடையதாக ஐந்து வரிசைகள் ஏற்படுத்தவும்.
137. ஒரு வரிசையாக இருந்தாலும் பெரிதாக நான்கு வாயில்களை உடையதாகவும் அல்லது ஒரு வாயில் உடையதாகவும் மண்டப அமைப்பை உடையதாகவும் மற்றும்
138. பந்தல், கூடாரம், போன்ற அமைப்பை உடையதாகவும் ஐந்து ஒன்பது அல்லது ஒரு அக்னியோடு கூடியதாகவும் மேற்கட்டிதுணிகள் கொடி இவைகளோடு கூடியதாகவும்
139. தர்ப்பை மாலையோடு கூடியதாகவும் முத்து தோரணங்களோடு கூடியதும் தேங்காயோடு கூடியதும் எல்லா அலங்காரங்களோடு கூடியதாகவும்
140. நடுவில் எட்டு மாத்ராங்குல அளவுடையதாகவும் ஒவ்வொரு அங்குலம் அதிகம் உடைய இருபத்தெட்டு அங்குலம்வரை உள்ள மேடையோடு கூடியதாகவும்
141. யாகசாலையின் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு வேதிகையின் உயரமும் பரப்பும் கூறப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு பங்கோ ஐந்தில் ஒரு பங்காகவாவது உபவேதிகை இருக்க வேண்டும்.
142. முஷ்டி அளவுள்ளதும் அல்லது ஓட்டை அளவுள்ளதும் அல்லது கையளவு (முழம்) உள்ளதுமான குண்டம் இருக்கலாம். அந்த குண்டம் நாற்கோணமாகவோ அல்லது வட்டவடிவமாகவோ மூன்று மேகலைகளோடு கூடியதாக இருக்க வேண்டும்.
143. மண்டபத்திலோ அல்லது பெரிய இடத்திலோ யாகம் அதிவாஸம் செய்ய வேண்டும். இவ்விதம் எல்லாவற்றையும் சேகரித்து மண்டப ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும். சில்பியை திருப்தி செய்து அனுப்ப வேண்டும்.
144. புண்யாஹவாசனம் செய்து வாஸ்த்து ஹோமம் செய்ய வேண்டும். எல்லா யாகங்களுக்கும் முக்யமான மண் எடுத்தலை செய்ய வேண்டும்.
145. வேதிகையினுடைய மத்தியில் எல்லா லக்ஷணங்களோடு கூடிய ஸ்தண்டிலம் செய்ய வேண்டும். ஒரு மரக்கால் முதல் ஒன்பது மரக்கால் வரை நெல் போடவேண்டும்.
146. அதில் பாதி அரிசியும் அதில் பாதி அளவு எள்ளும் அதே அளவு பொறியும் போட்டு நடுவில் தாமரையை எழுத வேண்டும்.
147. பலநிறமுடைய கர்ணிகைகளோடும் பிரகாசிக்கின்ற தளங்களோடு கூடியதும் எள், பொறி இவைகளால் ஆன கோடுகளை உடையதும் தர்பைகளோடு கூடியதும்
148. ஐந்து முதல் முப்பத்தாறு தர்பைகளோடு கூடிய அதன் நடுவில் சிவ கும்பத்தை வர்த்தனியோடு கூடியதாகவும்
149. அஷ்ட வித்யேச்வரர்களோடு கூடியதாகவும் கும்பங்களின் ஆவரணங்களோடு கூடியதாகவும் சிவகும்பத்தை ஸ்தாபனம் செய்ய வேண்டும். மேலும் எல்லா கும்பங்களும் வஸ்திரம் மற்றும் தங்க தாமரை முதலியவைகளால் அலங்கரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
150. மாவிலைகளோடும் கூர்ச்சங்களோடும் கூடியதாகவும், முழுமையான கோவைப்பழத்தின் பொலிவை உடையதாகவும் ஸ்நபனத்திற்கு கூறிய இலக்கணங்களோடு கூடியதாகவும் கும்பங்கள் இருக்கவேண்டும்.
151. சிவகும்பத்தில் ஒன்பது ரத்னங்களும் வர்தனியில் ஐந்து ரத்னங்களும், வெளியில் உள்ள குடங்களில் தங்கத்தையும் போட வேண்டும்.
152. செல்வம் நிறைந்தவர்களால் இவ்வாறு செய்யப்படவேண்டும். சிவகும்பத்திற்கு இரண்டு வஸ்திரங்கள் அணிவிக்கவேண்டும். தோரணம், துவாரகும்பங்கள் லோக பாலர்கள் இவர்களையும்
153. வித்யேஸ்வரர்களோடும், சக்தியோடும் அஷ்டமங்களங்களோடு கூடியதாகவும் தசாயுதங்களோடும், சிவ கும்பத்தை வைத்து பூஜிக்கவும்.
154. இவ்விதம் செய்து ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும். தங்கம், வெள்ளி, அல்லது பருத்தி நூல் இவைகளுள் ஏதேனும் ஒன்றினால் காப்பு செய்யப்பட்டதாக இருக்கவேண்டும்.
155. தங்கம், வெள்ளி இவைகள் பிம்ப கையின் அளவிற்கு சிறிது அளவு அதிகமாக உடைய தாக, பாம்பின் படம் உடையதாகவும் இருக்கவேண்டும்.
156. வாலோடு கூடிய அந்த சூத்ரம் ஸர்ப படத்தோடு கூடியதாகவும் இருக்கவேண்டும். சூத்ரத்திற்கு அனந்தன் அதிதேவதையாகும். தங்கத்திலோ வெள்ளியிலோ செய்யப்பட்ட சூத்ரம்.
157. எல்லா விருப்பங்களையும் நிறப்பக்கூடியதாகும். சூத்ரம் ஒன்றாக இருக்கும். சிறப்பானதாகவும் பிடிப்பை ஏற்படுத்தக்கூடிய வலயத்துடன் கூடியதாகவும் இருக்கவேண்டும்.
158. பட்டு முதலிய சூத்ரங்கள் மூன்று தத்துவங்களையும் ஐந்து கலைகளையும் உள்ளடக்கியதாகவும், அமைதியைத்தரவல்லதாகவும் வெற்றியைத் தரவல்லதாகவும் ஆகும்.
159. ஒன்பது நூலிழை உள்ளதாக அமைக்க வேண்டும். இது ஆரோக்யத்தை கொடுக்க கூடியதாகும். ஆறு நூல்களோலோ, ஐந்து அல்லது எட்டு நூல்களாலோ செய்யப்பட்ட ரக்ஷõஸூத்ரம் புத்ரன், நீண்ட ஆயுள் முதலியவற்றை கொடுக்க கூடியதாகும்.
160. கைப்பருமனுக்குத் தகுந்தவாறு ஒன்று, மூன்று, என்று அங்குலங்களில் அளவு வித்யாசங்களால் சூத்ரம் அமைக்கவேண்டும். நன்கு தண்ணீரால் சுத்தி செய்து சந்தனத்தைப் பூசி
161. விபூதி பாத்திரத்தில் நேத்ர மந்திரத்தை உச்சரித்து விபூதியை வைத்து தனியாக ஸ்தண்டிலம் செய்து அதை ஆஸனத்தின் மேல் வைக்க வேண்டும்.
162. மரக்கால் முதலிய அளவுகளாலும் இரண்டு படிக்கு குறையாமலும் நக்ஷத்திரம் போல் பிரகாசமான அரிசியை ஹ்ருதய மந்திரத்தை கூறியவாது நிரப்பி அஸ்த்ர மந்திரத்தால் பாத்திரத்தை வைக்க வேண்டும்.
163. அதன் நடுவில் விபூதி பாத்திரத்தில் சூத்ரத்தை வைக்கவேண்டும். வெட்டப்படாமல் இரண்டு பாக்கு முதலியவைகளோடு கூடியதாகவும்
164. வெட்டப்படாத அடி, நுனி பாகத்தை உடைய வெற்றிலையை வடக்கு, கிழக்கு முகமாக வைத்ததாக ரக்ஷõ சூத்திரத்தையும் வைத்து இவைகளை ஸ்தண்டிலத்தின் மேல் வைக்க வேண்டும்.
165. புண்யாகவாசனம் செய்து ஹ்ருதய மந்திரத்தால் பிரோக்ஷித்து, ஸ்தண்டிலத்தில் சக்தியை பூஜை செய்து யந்திரிகையில் மூன்று தத்வத்தை பூஜிக்க வேண்டும்.
166. பாத்ரத்தில் பிரதானமான மாயா தத்வத்தையும் அரிசியில்சிவனையும் விபூதி பாத்திரத்தில் உமா சக்தியையும் விபூதியில் லகுளீச்வரனையும்
167. சூத்ரத்தில் அனந்தன் முதலிய நாகர்களையும் பூஜை செய்து சந்தனம் முதலிய உபசாரங்களை செய்து பட்டு முதலான வஸ்திரங்களால் பாத்திரத்தை மூடி மாலையை அதன்மேல் வைக்கவேண்டும்.
168. எல்லா அலங்காரங்களோடும், எல்லா வாத்யங்களோடும் கிராம பிரதட்சிணமோ அல்லது ஆலய பிரதட்சிணமோ செய்ய வேண்டும்.
169. அல்லது செய்யாமலும் இருக்கலாம். பிறகு இறைவனை பூஜிக்க வேண்டும். கட்டைவிரல் மோதிர விரலால் இவைகளால் இடதுகையில் எடுத்து
170. விபூதியோடும் வலது இரண்டு விரல்களினால் அந்த ரக்ஷõ சூத்ரத்தை பூச வேண்டும். அனுஷ்டுப்புடன் கூடிய நேத்ர மந்திரத்தால் (த்ரயம்பகம் என்ற மந்திரத்தால்)
171. தெய்வங்களுடைய வலது மணிக்கட்டில் கட்டி அந்த இடத்தில் விபூதியை வைக்கவேண்டும். இது ஆண் தெய்வங்களுக்கு பொருந்தும். பெண் தெய்வங்களுக்கு வலது கையிலோ, இடது கையிலோ கட்டலாம்.
172. ஆசார்யன் முதலியோர் மக்களுக்கு விபூதி கொடுக்க வேண்டும், தாம்பூலம், அப்பம், பழம், தேங்காய், இவைகளையும் கொடுக்க வேண்டும்.
173. தேவனுக்கும் பக்தர்களுக்கும் கொடுக்க வேண்டும். கொடுக்காமலும் இருக்கலாம். ஸோமாஸ் கந்தரிடமோ, ஸ்கந்தரில்லாமலுள்ள உமாமஹேச்வரரிடமோ, சந்திரசேகரிடமோ ரக்ஷõபந்தினம் செய்ய வேண்டும்.
174. தேவியோடு கூடியதாக இருந்தாலும், இல்லாமல் இருந்தாலும் சிறப்பாக உடைய நர்த்தன ரூபத்திலும் உமாமகேச்வரர் உட்கார்ந்திருக்கும் மூர்த்தி சுகாசீனர், மஹேச்வரன்
175. அல்லது உத்ஸவத்திற்காக ஏற்பட்ட சாந்த உருவமுடைய இறைவனுக்கும் இன்னும் பல மூர்த்திகளுக்கும் விருப்பத்திற்கு ஏற்றவாறு ரக்ஷõ பந்தனம் சொல்லப்படுகிறது.
176. கிராமபிரதட்சிணத்தை ரக்ஷõபந்தனம் முடிந்த பிறகு செய்யவேண்டும். இவை இரண்டும் யாகாரம்ப காலத்தில் (தினத்தில்) செய்யவேண்டும் என சொல்லப்படுகிறது.
177. மற்றொரு நாளில் அல்லது உத்ஸவத்தின் நடுவில் விரும்பிய தெய்வத்திற்கு ரøக்ஷ கட்டிவிடலாம். அல்லது அதற்கு முதல் நாளும் கட்டிவிடலாம்.
178. ரவுத்ர மூர்த்தியினிடத்திலும் சாந்த மூர்த்தியினிடத்திலும், சிவபக்தரிடத்திலும் இந்த விதி பொருந்தும். திரிசூலத்தின் நடுபாகத்திலோ, அதில் உள்ள தெய்வத்தின் கையிலோ ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும்.
179. தசாயுதங்கள் எல்லாவற்றிற்கும், யாக ஆரம்ப முதல் நாளோ அல்லது அந்த நாளிலோ ஸூத்ர பந்தனம் செய்யவேண்டும்.
180. இது இரண்டிற்கும் முன்பு தீர்த்தாங்குரம் செய்யவேண்டும். ஆசார்யன் மூர்த்திபர்களுடன்கூடி (சித்விக்குகளுடன்) ஸகளீகரணம் முதலியன செய்துகொண்டு
181. திவார பூஜையை, செய்து யாகசாலையில் நுழைந்து பிரம்மேஷ்டி (ஸந்த்யாவந்தனம்), பூதசுத்தி, ஸகளீகரணம் முதலியவைகளைச் செய்து
182. பாத்யம், அர்க்யம், ஆசமனம், இவைகளை கொடுத்து, அர்க்ய ஜலத்தால் பிரோக்ஷணம் செய்து யாகசாலையில் ஸ்தண்டிலத்தில் சிவாஸனம் செய்து
183. சிவ கும்பத்தில் மூர்த்தியை மூர்த்தி மந்திரத்தால் ஆவாஹனம் செய்து, பஞ்ச பிரம்ம மந்திரங்களையும் நியாசித்து கலாநியாஸமும் செய்ய வேண்டும்.
184. வித்யாதேஹத்தை கல்பித்து பிரணவ ரூபமான சிவபெருமானை ஆவாஹணம் செய்து ஹ்ருதயம், முதலிய மந்திரங்களை நியாஸம் செய்து பாத்யம் முதலிய உபசாரங்களை செய்ய வேண்டும்.
185. இவ்விதம் மனோன்மணியையும், சக்தி மந்திரத்தால், பூஜிக்கவேண்டும். சுற்றிலும் வித்யேச்வரர்களையும் லோகபாலர்களையும் பூஜிக்கவேண்டும்.
186. அவர்களுடைய பத்து ஆயுதங்களையும் கண்ணாடி முதலிய அஷ்டமங்களப் பொருளையும் பூஜிக்கவேண்டும். அவைகளை வேதிகையின் பக்கத்திலும் ஸ்தண்டிலத்திற்கு மேலேயோ அல்லது ஸ்தலத்திலோ
187. எட்டு திக்குகளிலுமோ, அல்லது திக்கிற்கு இரண்டு இரண்டாக வேண்டும் அதன் முடிவில் எட்டு திக்குகளில் ஸ்தண்டிலத்தில் உள்ள தசாயுதங்களை
188. முறையாக பூஜித்து ஆசார்யன்யாக குண்டத்தின் அருகில் சென்று அதன் ஸம்ஸ்காரங்களை செய்து சிவாக்னியை முறைப்படி ஏற்படுத்த வேண்டும்.
189. ஒன்பது, ஐந்து, இவ்விதம் அவரவர்கள் குண்டங்களில் ஆவாஹணம் செய்து சிவனை நன்கு பூஜித்து பிரும்மாங்கங்களோடு சேர்த்து ஹோமம் செய்யவேண்டும்.
190. கிழக்கு முதலிய நான்கு திக்குகளிலும் வக்த்ரம் (தத்புருஷ) முதலிய மந்திரங்களையும் தென்கிழக்கு முதலிய விதிக்குகளில் ஹ்ருதயம் முதலிய மந்திரங்களையும் தன்தன்பிரதானமந்திரங்களோடு பூஜித்து மற்ற எல்லா மந்திரங்களை பிரதான குண்டத்தில் ஹோமம் செய்ய வேண்டும்.
191. மூங்கிலரிசி, பில்வம், யவை, ஸத்துமா, பால், வெல்லம், எள், கடுகு, பயறு இவைகள் எதுவும் ஹோமத்தில் இடம்பெறுபவையாகும்.
192. (பிரும்மசாலி) பெருநெல், யவை அல்லது உளுந்து, நெல், யவை அல்லது எள், கடுகு, பயிறு அல்லது ஸத்துமா மூங்கிலரிசி, வெல்லம், தேன்
193. என்று நான்குவிதமாக ஹோமத்ரவ்யம் சொல்லப்பட்டது. ஸமித்து, நெய், அன்னம், பொறி இவைகளை நான்கு பகுதிகளிலும் ஹோமம் செய்ய வேண்டும்.
194. சிவாங்க மந்திரத்தில் பத்தில் ஒரு பங்கும் மற்றும் 108 முறை மூல மந்திர ஹோமமும் பிரதான குண்டத்தில் செய்து, கலைகளுக்காக மற்ற குண்டங்களிலும் ஹோமம் செய்ய வேண்டும்.
195. திரவ்ய பேதங்களால், மந்திரங்கள் சிவாமத்தில் சில சொல்லப்பட்டன. ஆனால் தந்திரங்களின் பேதத்தால் மந்திரபேதம் இங்கு சொல்லப்படவில்லை.
196. ஹவிஸ்ஹோமம் ஹோமத்தின் முடிவிலோ ஹோமத்தின் ஆரம்பத்திலோ செய்யலாம். அதன் முடிவில் பலிதானம் செய்யவும் அதன் முறை இங்கு சொல்லப்படுகிறது.
197. நித்யோத்ஸவ முறையில் உள்ள ஹவிர்மயமான அன்ன லிங்கத்தை செய்து அங்கு அஸ்திர ராஜரை பூஜித்து திரிசூலத்தோடு கூடிய
198. தசாயுதங்களோடும், தூபதீபங்களோடும், மணிநாதத்தோடும், திரவ்யத்தோடும்
199. குடை முதலிய உபசாரங்களோடும் பலவித வாத்யங்களோடும் நகரம் முதலியவைகளில் ஆசார்யனோ, அல்லது சிஷ்யனோ பிரவேசிக்க வேண்டும்.
200. தேவதா ஆஹ்வானம் செய்யும் இடத்தில் பலியை முறையாக கொடுத்து மோதகம், இட்லி, பயிறு, வெல்லம், சத்துமா கணேச்வரர்க்கும்
201. பிரம்மாவிற்கு பிரியமான பாயாசம், மஞ்சள்பொடி, தாமரை புஷ்பம், பொறி, இவைகளை இரண்டாவது நாள் பிரம்மாவிற்கு பலி கொடுக்கப்பட வேண்டும்.
202. நெய்கலந்த வாழைப்பழத்தோடு கூடிய எள் அன்னத்தை பூதங்களின் திருப்திக்காக மூன்றாம் நாளில் பலிகொடுக்க வேண்டும்.
203. மஞ்சள் பொடியோடு கூடியதும், தேங்காயோடு கூடியதுமான எள் அன்னத்தை கந்தர்வர்களின் பிரியத்திற்காக நான்காவதுநாள் பலி கொடுக்க வேண்டும்.
204. தினை கலந்ததும் இந்தர வல்லியோடு கூடியதுமான நெய்யை இந்திரன் பிரியத்திற்காக ஐந்தாவது நாள் பலி கொடுக்க வேண்டும்.
205. நெய்யோடு கூடியதும் பலாச்சுளைகளோடு கூடியதுமான மூங்கிலரிசி அன்னத்தை ரிஷிகளின் பிரீதிக்காக ஆறாவது நாள் பலி கொடுக்க வேண்டும்.
206. நெய்யோடும் கூடியதாகவும் கையாந்தரை பழத்தோடு கூடியதுமான சர்க்கரைப் பொங்கலை லட்சுமி பிரீதிக்காக ஏழாவது நாள் பலி கொடுக்க வேண்டும்.
207. உளுந்து சாதம் நெய்யோடும் கூடியதாகவும், ராக்ஷஸர்களின் பிரீதிக்காக எட்டாவது நாள் பலி கொடுக்கவேண்டும்.
208. சுத்தான்னத்தை தயிர், ஸத்துமா, பொறி, புஷ்பம், இவைகளோடு சிவனுடைய பிரீதிக்காக ஒன்பதாவது நாளில் பலி கொடுக்கவேண்டும்.
209. மற்றொரு முறையில் தேவதைகளுக்கு திரவ்யங்கள் சொல்லப்பட்டுள்ளன. சுத்தான்னம், தயிர், இட்லி, அப்பம் இவைகளோடும் கூடியதாகவும்
210-211. பழங்களோடும், வெல்லம், இவைகள் சேர்த்து கணபதிக்கு பிரியமானதாக ஆகும். பழங்களோடு மஞ்சள்பொடி, நெய்சாதம், தயிர், கலந்த சத்துமா, எள்சாதம் இவைகள் பூதங்களுக்கு பலியுமாகும்.
212. தாமரை கிழங்கு, தர்பை நுனி, நெய்கலந்த அன்னமிவைகளை வாழைப்பழத்தோடு கூடியதாக ரிஷிகளுக்கு பலி கொடுக்க வேண்டும்.
213. மின்னிக்கொடி, மஞ்சள், தினையுடன் நெய் சேர்த்து நான்காவது நாள் இந்திரன் திருப்திக்காக பலி கொடுக்கவேண்டும்.
214. பாயாசம், மஞ்சள்பொடி, தாமரை புஷ்பம், பொறி இவைகளை ஐந்தாவது நாள் பிரம்மாவின் ப்ரீதிக்காக பலி கொடுக்கவேண்டும்.
215. நெய்யோடு கூடிய சர்க்கரை பொங்கல் கையாந்தரை பழம் இவைகளோடு கூட விஷ்ணு பிரீதிக்காக ஆறாவது நாள் பலிகொடுக்க வேண்டும்.
216. எள்ளு சாதம் நெய் கலந்து தேங்காய், பழம் இவைகளோடு கூட சிவபிரீதிக்காக ஏழாவது நாள் பலி கொடுக்கவேண்டும்.
217. மூங்கிலரிசி அன்னத்தை தயிர் கலந்து வாழை, பலா இவைகளோடு கூட ஈஸ்வர திருப்திக்காக எட்டாவது நாள் பலி கொடுக்க வேண்டும்.
218. சுத்தான்னம், தயிரோடு கூடி பொறி புஷ்பம் இவைகளோடு கூடியதாக சண்டேசரின் திருப்திக்காக ஒன்பதாவது நாள் பலி கொடுக்க வேண்டும்.
219. ஒன்பது நாட்களுக்கு திரவ்ய பொருட்கள் சொல்லப்பட்டன. அதற்கு பிறகு பன்னிரெண்டு நாட்களுக்கு சொல்லப்படுகிறது.
220. வெண்பொங்கல் இட்லி, மோதகம், வாழை, வெல்லம், இவைகள் சேர்த்து, கணபதி மந்திரத்தை நினைத்து முதல்நாள் பலி கொடுக்க வேண்டும்.
221. மாம்ஸம் எள், அப்பம், நெய், மீன், செம்பருத்தி புஷ்பம் இவைகளோடு கூடிய சிவப்பு அன்னத்தை
222. பைசாச மந்திரத்தை நினைத்து இரண்டாவது நாள் பலி கொடுக்கவேண்டும். பாயாஸம், ஸத்துமா, புஷ்பம் தாமரை பூ, இவைகளோடு கூட
223. பிரம்ம மந்திரம் சொல்லி மூன்றாவது நாள் பலி கொடுக்கவேண்டும். எள்சாதம், நெய், ஸத்துமா, இட்லி, இவைகளோடு கூட
224. கந்தர்வ மந்திரத்தை சொல்லிக்கொண்டு நான்காவது நாள் கொடுக்கவேண்டும். மின்னல் கொடி, மஞ்சள் சாதம் நெய்யோடும், பொறியோடும் கூட
225. பூத மந்திரங்களைச் சொல்லிக்கொண்டு ஐந்தாவது நாள் கொடுக்கவேண்டும். வெல்லம், நெய், தேங்காய் பழம் இவைகளோடு கூட
226. ஸ்கந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டு ஆறாவது நாள் கொடுக்கவேண்டும் தர்பை நுனி, நெய் சுத்தான்னம் தயிரோடு, கூட
227. ரிஷிகளின் மந்திரங்களை சொல்லிக் கொண்டு ஏழாவது நாள் பலி கொடுக்கவேண்டும். பால்சாதம், அரிசிமாவு கரும்பு துண்டுகளோடு கூட
228. நாக மந்திரங்களை சொல்லிக்கொண்டு எட்டாவது நாள் பலி கொடுக்கவேண்டும். தயிர் சாதம், வெல்லம் மாதுளம்பழம், இவைகளை
229. இந்திர மந்திரத்தை சொல்லிக்கொண்டு ஒன்பதாவது நாள் பலி கொடுக்கவேண்டும். சர்க்கரை பொங்கல் நெய், வாழை, பலா இவைகளோடு கூட
230. விஷ்ணு மந்திரத்தை சொல்லிக்கொண்டு பத்தாவது நாள் பலி கொடுக்கத் தகுந்தது. சிவப்பு அன்னம் மாம்ஸம், அபூபம், (அப்பம்) எள் பொடி இவைகளை
231. ராக்ஷஸ மந்திரத்தை சொல்லிக்கொண்டு பதினோறாவது நாள் பலிகொடுக்க வேண்டும். அரிசி சாதம், தயிர் சேர்த்து வெல்லகட்டிகளுடன்
232. சிவ மந்திரத்தை சொல்லிக் கொண்டு பன்னிரண்டாம்நாள் பலி கொடுக்க வேண்டும். ஏழு, ஐந்து, மூன்று ஓர் இரவு உத்ஸவ காலங்களில்
233. முன்புள்ள தினத்தை விட்டுவிட்டு அடுத்துள்ள தினத்தை தினதேவதை திரவ்யங்களாக கிரஹிக்கவேண்டும். முனிவர்களே, தினதிரவ்யம், பலிதிரவ்யம், இரண்டும் இங்கே சொல்லப்பட்டது.
234. முதலில் பிரும்மாதி தேவர்களுக்கு பலி இவ்விதம் உண்டாகும். தின அதிபதி சூர்யன் முதலானவர்களின் திருப்திக்காக சுத்தான்னத்தை தயிரோடு கூட கொடுக்கப்படவேண்டும்.
235. லோகபாலர்களின் திருப்திக்காக லோக பாலர்களின் மந்திரங்களை சொல்லிக்கொண்டு கொடுக்க வேண்டும். விருஷபம் முதலிய பரிவாரங்களுக்கு திவஜஸ்தம்பத்திலும், பிரம்மா முதலியவர்களுக்கு
236. பலிகொடுத்துவிட்டு அதன் முடிவில் பலி பீடத்தில் முறையாக பலி கொடுக்கவேண்டும். கொடி முதல் பலி பீடம் வரையில் பலி சொல்லப்படுகிறது.
237. பிரம்மா முதல் பலிபீடம் வரையில் அல்லது இந்திரஸ்தானத்திலிருந்து பீடம் வரையிலோ அந்தந்த தினத்தேவதைகளுக்கு பலிபீடத்திலோ பலி கொடுக்கலாம்.
238. தினதேவர்களின் திருப்திக்காக சுத்தான்னத்தால் பலி கொடுக்கலாம். தின தேவர்களுக்குமோ லோகேசர்களுக்குமோ பலி கொடுக்க வேண்டும்.
239. தின தேவரின் பலி பொருளால் லோக பாலர்களுக்கும் பலி கொடுக்கலாம். எல்லா தினங்களுக்கும் தினமும் இரண்டு பலி கொடுக்கவேண்டும்.
240. அவைகளுடன் ஓர் வாத்யத்தோடு திக்பலி தினபலிகளை அளித்தல் காலை, மாலை இருவேளையிலும் பலி கொடுக்க வேண்டும்.
241. பலி கொடுக்கும் போதோ, கொடுத்த பிறகோ சுவாமி புறப்பாடு செய்யவேண்டும். அதன் வாஹன முறை சொல்லப்படுகிறது. முதலில் விருஷப வாஹனம், இரண்டாவது சுற்றக்கூடிய யந்திரமாகும்.
242. ஊஞ்சல் அல்லது சிபிகை (பல்லக்கு) மூன்றாவது நாளிலும், குதிரை நான்காவது நாளிலும், ஸிம்மம் ஐந்தாம் நாளிலும், தீபம் ஆறாம் நாளிலும் ஆகும்.
243. ஆடு வாஹநம் ஏழாம் நாளிலும், ரதம் எட்டாம் நாளிலும் இவ்விதம் ஒன்றுக்கொன்று அழகானதாக செய்யவேண்டும்.
244. மூர்த்திகள் அனேக ரூபங்கள் அதன் முடிவில் சொல்லப்பட்டன. அதன் முடிவில் பலி பீடத்தோடு கூட பலிதானம் செய்யவேண்டும்.
245. அன்ன லிங்கத்தோடு கூடியதாகவும் திரிசூலத்தோடு கூடியதாகவும் பத்து ஆயுதங்களோடு கூடியதாகவும் கோளக (பத்ரலிங்கம்) லிங்கத்தோடு கூடியதாகவும்
246. ரதத்தில் உள்ள கணேசர்களுடனும் முடிவில் நந்திகேஸ்வரர் ரதத்திலோ சிபிகையிலோ எல்லா அலங்காரங்களோடு
247. இவைகளோடு கூட இல்லாமலும் பலி அங்கங்களோடு கூடியதாய் அதன் முடிவில் விருஷபமும் பின்பு நாட்டியத்திற்கு முகரங்கம் என்ற வாத்யத்துடனும்
248. அதன் பின்பு ஸர்வாங்க சுந்தரமான இறைவனின் தேரும் அதன் இரண்டு பக்கங்களிலும் அலங்கரிக்கப்பட்டவர்களும்
249. கையில் சாமரத்தை உடையவர்களுமான எனக்கு பணிவிடை செய்யும் பெண்களால் பிரகாசிக்கின்றதும் நவரத்னங்களினால் பிரகாசிக்கின்ற குடைகளோடு கூடியதும் தொடர்ந்து செல்கின்ற
250. என் அருகிலே உள்ள சிவாச்சார்களோடு சிறப்புற்றும் எனக்கு பின்னால் என் தொண்டில் ஈடுபடுபவர்களான
251. கவனத்தோடு கூடிய பரிசாரகர்களான பக்தர்கள் கூட தாமரை மொட்டுடன் பாசத்தோடு கூடிய கையையுடையவளாலும்
252. புருஷன் போன்ற தோற்றம் கொண்ட கன்னிகையால் என்னுடைய பணிவிடை கன்னிகையுடன்கூடி அழகாக உள்ளதும் என்னுடைய மனைவியான ஈஸ்வரியின் தேருக்கும்
253. அதனருகில் தேவதேவேசி ரதத்திலும் அவ்வாறே அலங்கரிக்கப்பட்டும் அதன் முடிவில் சண்டிகேஸ்வரர் ரதமும் தனியாக அமைக்க.
254. சிவனுக்கு ஏற்பட்ட வேறு பதினாறு பிம்பங்கள் எவையுண்டோ அவையும் பல்வேறு தன்மை கொண்ட சிவபக்தர்கள் உண்டோ அவர்களின் பலவிதமான மஞ்சங்களும்
255. முன்பக்கம் செல்பவையாகவோ பின்பக்கம் வருபவைகளாகவோ செய்து கொண்டு இவைகளில் எது விருப்பமோ அப்படி செல்லலாம். பலிக்கு அங்கமான ரக்ஷõபந்தனமின்றி போகலாம்.
256. பலவாத்யங்களோடு கூடியதாகவும் யானை, குதிரை, ஒட்டகம், இவைகளோடு கூடியதாகவும் வீதி சுத்தம் செய்யப்பட்டதாகவும் தண்ணீர் தெளிக்கப்பட்டதாகவும்
257. ஒவ்வொரு வீடும் பலவித (பொடி) கோலம் சித்ரங்களோடு கூடியதாகவும் மங்கள அங்குரத்தோடும் வர்தனி கும்ப தீர்த்தத்தோடும் கூடியதாகவும்
258. வாழைமரம் பாக்கு, இலை இவைகளோடு கூடியதும் பட்டு வஸ்திரம் இவைகளோடு பிரகாசிப்பதும் தர்பமாலையோடு கூடியதும் முத்துமாலைகளால் பிரகாசிப்பதும்
259. மேலேயும், கீழேயும், ஒவ்வொரு தளத்திலும் தீபதண்டத்தையும், இரவாக இருந்தால் தீபமாலையாலும் அலங்கரிக்கப்பட வேண்டும்.
260. வீட்டினலங்காரம் கூறப்பட்டது. கிருஹம் இல்லாத இடத்திலும் அதன் அலங்காரமானது பலவித கொடிகளோடு கூடியதும் பலவாத்யங்களோடு கூடியதும்
261. பல ராகங்களோடு கூடியதும் பல கூட்டங்களோடு கூடியதும் பல குடைகளோடு கூடியதும் தோகை சாமரத்தோடு கூடியதாக இருப்பதாயும்
262. கொடி ஆலவட்டம், இவைகளோடு கூடியதாகவும் தூபம், தீபம் இவைகளோடு கூடியதாகவும் மற்றும் இரவிலும் பகலிலும் மஹோத்ஸவத்தில் செய்ய வேண்டும்.
263. ரதத்திலோ, பல்லக்கிலோ அல்லது பரிசாரகர் தலையிலோ, ஈசனை எழுந்தருளச் செய்து வலம் வரவேண்டும். இந்த சமயங்களில் தாம்பூலம் பலவித பழங்களையும் கொடுக்கவேண்டும்.
264. திரையிடப்பட்டு பக்ஷணம், அப்பம் முதலியவைகளை கொடுத்து தகுதியுள்ளவை, தகுதியற்றவை என்ற பிரிவில் தக்தம் ஆர்த்ரம் என்று இரண்டாக பிரிக்கப்பட்டு
265. சமைக்கப்பட்டு அனைத்தும் அந்தணர்களால் தயாரிக்கப்பட்டதாகவும், நீர்சம்மந்தமான திரவ்யம் சூத்திரர்களாலும் தயாரானதாகவும் தோலுள்ள தோலில்லாத பதார்த்தங்களை நீரீக்ஷணாதி சுத்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
266. சங்கின் ஒலியோடு கூட பாத்யம், ஆசமனம் இவைகளோடு கூடியதும் திரையை எடுத்து நிர்மால்யத்தை நீக்கி
267. எல்லோர்க்கும் பக்தர்களுக்கும், வருபவர்களுக்கும், வந்துள்ள அனைவர்க்கும், எல்லோர்க்கும் அவர்களின் பக்திக்கு ஏற்ற வகையில் பொருளைக் கொடுத்து
268. இறைவனை இளைப்பாற ஆஸ்தான மண்டபம் முதலியவைகளில் எழுந்தருளச் செய்வது, இறைவனுக்கு பாத்யம் முதலியவைகள் கொடுத்து, சாந்திஹோமம் ஸ்நபனம் வைத்து
269. எல்லா தோஷங்களின் நிவிருத்திக்காக தச்சர்களால் ஸ்பர்சிக்கப்பட்ட தேர்முதலிய வாஹனத்தின் தோஷ சாந்திகளாகவும் சண்டாளர் பாணர்களின் திருஷ்டி நிவிருத்திக்காகவும் விசேஷமாக
270. சாந்தி பரிஹாரம், அவசியம் என்று அறிந்து கொள்ள வேண்டும். சாந்தி ஹோமம் இல்லாவிட்டாலும் அல்லது முடியாவிட்டாலும் ஸ்நபனம் செய்ய வேண்டும்.
271. ஐந்து பிரகாரங்களுக்கு வெளியில் ரத ஓட்டம் நடந்தால் ஸ்நபனம் ஐந்து குருணி (15 மரக்கால் அளவு)
272. நாற்பது மரக்கால் ஜலம் அல்லது அதில் பாதி அல்லது அதில் கால் பகுதி அல்லது கொஞ்சம் குறைவு என்ற முறையில் இறைவனுக்கு அபிஷேகம் செய்யவேண்டும்.
273. வேட்டையாடுதலும் சிறப்பான ஸ்நபனம் செய்யவேண்டும். அந்தந்த காலத்திற்கு ஏற்றவகையில் இது செய்வது இஷ்டத்தைக் கொடுப்பதாகும் என்று சொல்லப்படுகிறது.
274. காலசந்தி யாகமண்டபம், ரதம் முதலியவைகளில் ஏற்றம் மற்றும் உச்சிகால பூஜை இவை நித்யம் எனப்படும்.
275. ரதத்தில் ஸ்வாமி இருந்தால் தூபம் வரையிலும் ஆலயத்தில் நைவேத்யம் வரையிலும் செய்ய வேண்டும். சிவாலயத்தில் யாத்திரைக்காக ஸ்நபனம் செய்வது பிறகு நைமித்திக பூஜை செய்ய வேண்டும்.
276. நடராஜன் தேர்கால் தர்சனத்திற்கு பிறகு மாலையில் பூஜையும் மறுபடியும் ஹோமம் பிறகு கிராம பிரதட்சிணமும்
277. புறப்பாட்டிற்கான ஸ்நபனம் பூஜை, ஆடல் பாடல் உபசாரம் பிறகு தேவியோடு அருள்பாவித்தல் செய்தல் வேண்டும்.
278. காலத்தில் பதினாறு பங்காக்கப்பட்டதும் அரையாமமாக கூறப்பட்டதுமான காலத்தில் ரக்ஷõபந்தனம் செய்யப்பட்ட தேவனுக்கு அந்த காலங்களின் செயல்கள் கூறப்பட்டன.
279. இவைகள் உரிய காலத்தில் அனுஷ்டித்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். மிகவும் முன்னால் செய்தால் சிறப்பு இல்லை. மிகவும் தாமதமாக செய்தாலும் சுபம் இல்லை.
280. ஆகையால் முயற்சியுடன் முன்சொன்ன அதன் காலத்திலேயே செய்வது சிறந்தது. தன்னுடைய காலத்தில் குற்றம் இருக்கும் ஆனால் இவைகள் பிற்காலத்தில் செய்யப்படவேண்டும்.
281. வாஹனங்களில் செல்லும் காலங்களில் பலியிடும் காலத்தில் முன் சமயங்களில் பரிவாரங்களுக்கு சொன்ன முறையில் பலிபீடத்தில் பலி போடவேண்டும்.
282. மண், மரம், அல்லது உலோகம் இவைகளாலான பீடத்திலோ அல்லது பூமியிலேயே சமப்படுத்தி பலியிடலாம். யாக மண்டபத்தில் நுழைதல் அல்லது உள்ளே செல்ல கோயிலில் நுழைதல்
283. அங்கு தாம்பூலம் முதலியவைகள் கொடுத்தாலும் கொடுக்கலாம். உரிய காலத்தில் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். செய்யப்படாவிடில்
284. இரவில் நீராஜநம் தூபதீபமுடிவில் செய்ய வேண்டும். வீதிவலம் வரும் சமயத்தின் முடிவில் பெரியதான பலி (ஹவிஸ்) கொடுக்க வேண்டும்.
285. இவ்விதம் தினமும் செய்துவர வேண்டும். அதன் சிறப்பு இப்பொழுது சொல்லப்படுகிறது. கிராமம் முதலியவைகளிலோ அல்லது அதற்கு வெளியில் ஒரு மண்டபம் தயார் செய்ய வேண்டும்.
286. மண்டபம் முதலான இடங்களில் ஸ்வாமியை அழைத்து சென்று பூஜித்து வினோதமான தர்சனம் செய்வித்து வாஹனத்திலோ அல்லது சிரசில் வைத்தவாறோ கிராமபிரதட்சிணம் செய்யவேண்டும்.
287. மழை பெய்தாலும், மழை பெய்யும் என்ற நிலையிலும் ஒரேஇருட்டாக இருந்தாலும் இவ்விதமே வெளிமண்டபத்தில் வந்து செய்யலாம்.
288. மீதமுள்ள பிரக்ஷிணத்திற்கு சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். யாகாரம்ப தினத்திலும் தீர்த்தம் கொடுக்கும் தினத்திலும்
289. கிராமத்தை முறையாக சுற்றி வரவும். பிராயச்சித்தம் தேவையில்லை. கிராம பிரதட்சிணம் இல்லாவிடில் திசா ஹோமம் செய்ய வேண்டும்.
290. ஆகாயம் நிர்மலமாகவும் சந்திரனுடன் கூடியதாகவும் இருக்கும்போது அவச்யம் சுவாமி புறப்பாடும் பலிதானமும் செய்யப்படவேண்டும்.
291. தீர்த்தம் கொடுக்கும் நாளிலிருந்து முன்னால் ஐந்தாவது அல்லது நான்காவது நாளில் அந்த வாரத்திலோ எண்ணெய் ஸ்நானம் மஞ்சள் பொடியோடும் செய்யலாம்.
292. தாம்பூலம் முதலியவைகளை இறைவனுக்கும் பக்தர்களுக்கும் முறையாக கொடுக்க வேண்டும். த்வஜாரோஹணம் (கொடியேற்றுதல்) முதலியவைகளிலும் கொடுக்க வேண்டும்.
293. தெய்வத்திற்கு எதிரில் தைலத்தை வைத்து ஸ்தண்டிலத்தில் அஸ்த்ர மந்திரத்தால் பிரோக்ஷித்து ஸம்ஹிதா மந்திரத்தை சொல்லி வைக்க வேண்டும்.
294. கவச மந்திரத்தால் அவகுண்டனம் செய்து ஹ்ருதயமந்திரத்தினால் சந்தனம் முதலியவைகளால் பூஜிக்க வேண்டும். மூலமந்திரத்தால் நமோந்தமாகச் சொல்லி சிவதத்வம் முதலியவைகளால் புஷ்பத்தோடு கூட எண்ணையை சிரஸில் வைக்க வேண்டும். தொடர்ந்து மஞ்சள் பொடியையும் இடவேண்டும்.
295. நெற்றியிலிருந்து கால், கை வரையிலும் மற்றும் தேவியின் கழுத்து வரையிலும் அல்லது மற்ற முறையிலோ ஸ்நானம் செய்விக்க வேண்டும். பிறகு பாசிபயிறு நிவேதனம் செய்ய வேண்டும்.
296. தீர்த்த தினத்திற்கு முன் நாள் அல்லது அதற்கு முன்போ அல்லது முதல் நாள் இரவோ நடராஜப் பெருமாள் வீதிவலம் வருதல் செய்ய வேண்டும்.
297. பூஜையின் பொருட்டு எல்லா அணிகலன்களோடும் கூடிய நடராஜபெருமானுக்கு சிறப்பாக ரக்ஷõபந்தனம் செய்விக்க வேண்டும்.
298. ஆகையால் மற்றொரு கூடத்திலோ அல்லது ஆஸ்தான மண்டபத்திலோ எல்லா அலங்காரத்தோடும் கூடியதாக பிரதட்சிணம் செய்ய வேண்டும்.
299. அந்த காலத்திலோ அல்லது காலையிலோ தேவதேவனை அழைத்துச் சென்று வினோத தரிசனமும் செய்விக்க வேண்டும்.
300. காலையில் ஸ்நானம் முதலியவைகளை முடித்து விட்டு பலவித அகில் முதலிய வாசனை பொருட்களோடு கூடிய சந்தனத்தாலும் அணிகலன்களாலும் அலங்கரிக்க வேண்டும்.
301. எல்லா வாத்யங்களோடும் ஆலய பிரதட்சிணம் செய்து வர வேண்டும்.
302. ஸ்தண்டிலத்தின் மேல் வைத்து புண்யாக வாசனம் செய்ய வேண்டும். அர்க்ய ஜலத்தால் பிரோக்ஷணம் செய்து சிவமந்திரத்தால் அபிமந்திரிக்க வேண்டும்.
303. சந்தனம் முதலியவைகளால் அர்ச்சித்து கவசமந்திரத்தால் அவகுண்டனம் செய்ய வேண்டும். சமித், நெய், ஹவிஸ் எள், பொறி, வெல்லம் இவைகளினாலோ
304. மூலமந்திரத்தால் நூறு ஆஹுதிகள் செய்தோ அஸ்த்ர ஹோமமோ செய்ய வேண்டும். ஐந்து அக்னியோடு கூடிய ஹோமம் எல்லாவற்றிற்கும் நன்மை பயக்கூடிய ஹோமம் ஆகும்.
305. பிராயச்சித்தம் அகோரமந்திரத்தால் செய்து பூர்ணாஹுதியோடு கூட ஸத்யஜாத மந்திரத்தால் ஸ்பர்சித்து சந்தனம் இவைகளை மூலமந்திரத்தால் கொடுக்க வேண்டும்.
306. கன்றுடன் கூடிய பசு, தங்கம், வெங்கல பாத்திரம், நல்ல வஸ்திரம் எள், நெய், அல்லது மற்றவையோ ஆசார்யன் திருப்திக்காக கொடுக்க வேண்டும்.
307. ஜலத்தானத்துடன் கூடியதாக யாத்ரா தானம் செய்ய வேண்டும். மஞ்சள் உப்பு, எள், கடுகு, இவைகளும்
308. தானம் செய்பவனுக்கு நன்மை தரக்கூடிய தாம்பூலம், அரிசி, சந்தனம், நெய், எள், எண்ணை, இவைகள் சிவதானம் என்று சொல்லப்படும்.
309. யோகிகள், தியானம், செய்பவர்கள், சிவஞானம், அறிந்தவர்கள் இப்படிப்பட்டவர்களுக்கு அந்த பூஜை தானம் எல்லா உயிரினங்களுக்கும் நன்மை பயப்பது ஆகும்.
310. சிறப்பு நாட்களில் தலைப்பாகை வஸ்திரம் முதலியவைகளை ஆசார்யனுக்கு கொடுக்க வேண்டும். ஒவ்வொரு தானத்தையும் ஜலத்தோடு சேர்ந்ததாக கொடுக்கப்படவேண்டும்.
311. சிறந்த அறிஞனான ஆசார்யனுக்கு உஷ்ணீஷம் முதலியவைகளை கொடுக்க வேண்டும். ஆசார்யனே சிவனாக ஆவான். ஆகையால் ஆசார்யனுக்கு சிவனுக்கும் வேறுபாடு இல்லை.
312. எவன் இவர்கள் இருவருக்கும் பேதத்தை பார்க்கிறானோ அவன் தாழ்வை அடைவான். எல்லா ஆகமங்களை அறிந்தவனும் அமைதியானவனும் சிவலிங்க வழிபாட்டில் ஈடுபட்டவனும்
313. நித்ய ஹோமத்தோடு கூடியவரும் சிவ பூஜைக்கு நிவேதனம் தயார் செய்பவனும் கிருஹபலி முதலியவைகளை செய்பவரும் பிøக்ஷ அளிப்பவரும் நிந்தனையில்லாதவருமான ஆசார்யனை சிவனாகவே அறிய வேண்டும்.
314. அதிகம் கூறுவானேன்? எங்கு எப்பொழுது இப்பேர்ப்பட்ட ஆசார்யன் திருப்தி அடைந்தவனாக ஆகிறானோ அப்பொழுது பொருள் அளித்தவனுக்கு அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு வித பெரும் பயனடையும் தன்மை ஏற்படுகிறது.
315. இது உண்மை, உண்மை திருப்பியும் உண்மை என மூன்று முறையாக உண்மை என்று நிச்சயிக்கிறேன். அவரின் பொருளை அபஹரிப்பவன் மூவுல கிலும் திருடன் எனப்படுவான்.
316. தேவனின் சொத்தை அபஹரிப்பதைக் காட்டிலும் ஆசார்யனுக்கு தரவேண்டியதை கொடுக்காமலிருந்தால் நூறு கல்பகோடி காலமானாலும் அந்த பாபத்திலிருந்து மீள முடியாது. ஆகையால் பாபத்தை அறிந்து
317. அவரால் சிரத்தையுடன் கொடுக்கப்பட்ட பொருள் வாங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவன் பாபத்திலிருந்து மீண்டு விடுகிறான் என்ற சொல் கேட்டிருப்பதால் தானம் கிரஹிக்கத் தக்கது. இவ்வாறு யாத்ராதானம் செய்து நைவேத்யங்கள் நிவேதனம் செய்ய வேண்டும்.
318. யாத்ராதானம் சிவலிங்க பிரதிஷ்டை முதலியவைகளில் முதலிலும் முடிவிலும் முக்யம் ஆகும். மற்ற இடங்களில் அரசனின் வெற்றிக்காக செய்யத் தகுந்தது.
319. கிரஹணம் முதலிய காலங்களில் இது மிகவும் உயர்ந்ததாக கருதப்படுகிறது. எல்லா அலங்காரத்தோடு கூடியதாகவும் முரவ வாத்யத்தோடு கூடியதாகவும்
320. சிவாச்சாரியார்களோடு கூடியவராகவும் பல்லக்கில் ஆரோஹணம் செய்வித்து ஐந்து பிரகாரங்களிலோ அல்லது அதற்கு வெளியிலோ பிரதட்சிணம் செய்ய வேண்டும்.
321. எல்லா மங்களங்களோடு கூடியும் அரச வேஷம் தரித்த காவலர்களோடும் பலவகையான ஆடல் பாடல்களோடு கூடியதாகவும்
322. பல்லக்கில் ஏறியவர்களாலும் ஸாமர்த்யமுள்ளவர்களாலும், முன்னும் பின்னும் தொடர்ந்து செல்பவர்களாலும், புஷ்பங்களால், சந்தன நீர்களால் சேவித்து வருபவர்களாலும் ஸ்வாமி வீதிவலம் வருதல் வேண்டும்.
323. அரச வேஷம் தரித்த தன்மையுள்ளவனோடும் முரவ வாத்யம் இல்லாமல் பிறகு ஆலயத்தின் உள்ளே சென்று முன் சொன்னபடி தேவனை ஸ்தாபனம் செய்யவேண்டும்.
324. ரக்ஷõ சூத்திரத்தை அவிழ்த்து விட்டு சந்தனம், புஷ்பங்களால் பூஜிக்க வேண்டும். அதன் முடிவில் சுவாமி ஊர்வலமோ அல்லது அதற்கு முன்பு ஊர்வலமோ செய்யலாம்.
325. இரவின் முடிவில் தேவதேவனை நடேச்வரனை தேரில் ஏற்றி முன்பு சொன்ன முறையில் கிராமாதி பிரதட்சிணமும் செய்விக்க வேண்டும்.
326. முடிவில் மறுபடியும் ஸ்னபனம் செய்ய வேண்டும். மற்ற பிம்பங்களுக்கும் சமான முறை இதேதான்.
327. தீர்த்த நடுவில் முதல் நாள் அல்லது அதற்கு முதல்நாளோ யுத்தாரம்பம் முதல் வேட்டையாடுதல் முடிய
328. மற்ற திருநாட்களுக்கான உற்சவ விக்ரகத்தினால் மறுபடியும் செய்ய வேண்டும். சிறப்பாக ஸ்நபனம் முன் சொன்னபடி மறுபடியும் செய்ய வேண்டும்.
329. அந்த இரவில் தீர்த்தத்திற்காக முன் சொன்ன முறையில் அங்குரார்ப்பணம் செய்ய வேண்டும். தீர்த்த உத்ஸவத்திற்காக இரவில் ஒன்பது கலசங்களை
330. சூத்ரத்தோடும் கூர்ச்சம், மாவிலை, தேங்காய் வஸ்திரம், மற்றும் வஸ்திரமில்லாமலோ கலசங்களையும் பிரதானத்திற்கு மட்டும் வஸ்திரத்துடனோ வைக்க வேண்டும்.
331. இரவில் தீர்த்தம் அல்லது ஸ்நான சமயத்திலோ காலையில் உதயத்திற்கு முன்போ தீர்த்த கார்யம் செய்யவேண்டும்.
332. தீர்த்த ஸ்தானத்தை அடைந்து பூமியை சுத்தம் செய்து இரண்டு ஸ்தண்டிலம் செய்து சூலத்திற்கு ஒன்று கலசத்திற்கு ஒன்றாக செய்ய வேண்டும்.
333. மேற்கில் சூலத்தையும் கிழக்கில் கலசங்களையும் வைக்க வேண்டும். புண்யாகம் செய்து முன்போல் தேவர்களை அழைக்க வேண்டும்.
334. திருசூலத்தில் எல்லா தீர்த்தங்களும் எல்லா துர்க்கைகளும் கூடியதாகவும், நடுவில் மனோன்மணியையும் சந்தனம் புஷ்பம் இவைகளால் பூஜிக்க வேண்டும்.
335. அந்த ஜலத்தால் சூலத்தை அபிஷேகம் செய்து நதியோ அல்லது நீர்நிலைகளில் சென்று கங்கை முதலியவைகளை ஆவாஹணம் செய்து தீர்த்த ஸங்கிரஹணம் செய்யவேண்டும்.
336. ஹே தேவி! கங்கையே! யமுனையே! நர்மதையே! ஸரஸ்வதியே! ஸிந்துவே! கோதாவரியே! காவேரி இந்த நீர் நிலைகளில் (ஆற்றில்)
337. இறைவனுடைய தீர்த்த உற்சவத்திற்கு இங்கு இருந்து அருள்பாலிக்க வேண்டும். சூரியன் மறையும் வரை பாபங்களை போக்க இங்கு இருந்து அருள வேண்டும். என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.
338. தீர்த்தம் எடுத்து அதன் நடுவில் கிழக்கு நோக்கிய தலை உடையதாக சிவமந்திரத்தை சொல்லிக் கொண்டு திரிசூலத்தை ஸ்நானம் செய்விக்க வேண்டும்.
339. திரிசூலத்தை ஜலத்திலிருந்து எடுத்து ஜலத்தின் கரையில் வைக்க வேண்டும். தீர்த்த ஸங்க்ரஹணம் செய்து தீர்த்தவாரியை செய்ய வேண்டும்.
340. வெகுதூரத்தில் ஜலமிருப்பினும் தீர்த்தவாரி செய்ய இயலாவிடினும் ஆலயத்திலேயே செய்யவும் எல்லா அலங்காரங்களோடு கூடியதாக ஆலயத்தினுள் நுழைந்து
341. முன் சொன்ன முறையில் ஹோமம் பலிதானம் இவைகள் செய்து தேவ ஆஸ்தான மண்டபத்தில் சூர்ணோத்ஸவம் செய்ய வேண்டும்.
342. இறைவனுக்கு எதிரில் இரண்டு ஸ்தண்டிலம் செய்ய வேண்டும். மேற்க்கில் திரிசூலம், மற்றொரு இடத்தில் உரலை வைக்க வேண்டும்.
343. அதன் நடுவில் மஞ்சளை பொடி செய்வதற்காக வைக்கவேண்டும். வஸ்திரங்களை அணிவித்து வைத்து உரல் நடுவில் மஞ்சள் பொடியையாவது வைக்க வேண்டும்.
344. முதலில் திரிசூலத்தை பூஜை செய்து விட்டு இரவு அதிவாஸம் செய்து உரலில் ஆதார சக்தியை பூஜை செய்ய வேண்டும்.
345. உலக்கையில் ஈசனையும் பூஜை செய்து கிருதசிரோர்பணம் செய்து அருகம்பில், புஷ்பம், நெல், அரிசி, இவைகளோடு
346. இறைவனுக்கு எதிரிலோ அல்லது நேராகவோ சூலமும் (அஸ்திரதேவர்) உரலும் உலக்கையும் இருக்கலாம்.
347. வஸ்திரத்துடனோ அல்லது இல்லாமலோ உலக்கை இருக்கலாம். முதலில் உலக்கையை பூஜை செய்து பிறகு உரலை பூஜை செய்ய வேண்டும்.
348. சிவதத்வம் முதலாகவோ, அல்லது ஆத்ம தத்வம் முதலாகவோ பூஜித்து அருகம்பில்லை ஆசார்யனால் அல்லது அவரால் ஏவப்பட்டவரால் வைக்கப்படவேண்டும்.
349. அரசன் அரிசி, இவர்களாலும் அவர்களால் ஏவப்பட்ட பெரியோர்கள் புரோஹிதர்கள் பக்தர்களாலும் உலக்கையால் இடிக்கப்படவேண்டும்.
350. அரச சன்னதியில் தொண்டு செய்கின்ற பெண்களாலும் எனக்கு பணிவிடை செய்யும் கன்னிகைகளாலும் அல்லது அரசர்களால் ஏவப்பட்ட ருத்திர கன்னிகைகளாலும்
351. தாசிகளாலும் (தொண்டு செய்பவர்களாலும்) பக்தர்களாலும் நேர்மையானவர்களாலும் மற்றும் சுத்தமானவர்களாலும் ஆசார்யன் உத்தரவால் அருஹம்பில் கொடுக்கப்படவேண்டும்.
352. மற்றவிடத்திலும் தெய்வங்களுக்கும் பெண் தெய்வங்களுக்கும், ரக்ஷõபந்தனமத்தியிலும் அதன் ஆரம்பத்தில் ஸ்நான காலத்திலும் மங்களத்திற்காக இது செய்யத் தகுந்தது.
353. அதன் முடிவில் மஞ்சளை அஸ்த்ர மந்திரத்தை மூன்றுமுறை சொல்லி இடித்து அருகம்பில்லிற்கு சொன்ன முறையிலேயே மஞ்சளை சூர்ணம் செய்ய வேண்டும்.
354. அந்த சூர்ணத்தை சிவமந்திரத்தை நினைத்து அதிலிருந்து எடுத்து பலவிதமான பாத்திரங்களில் லிங்கத்திற்காகவும் பிரதிமைக்காகவும் வைக்க வேண்டும்.
355. உத்ஸவ பிரதிமைக்காகவும், திரிசூலத்திற்காகவும், பரிவாரத்திற்காகவும் ஒருபாகமும், முறையாக பிரிக்க வேண்டும்.
356. மீதமுள்ளதை ஜனங்களுக்காக கலசங்களில் எடுத்துக் கொள்ள வேண்டும். வாஸனையுடைய தைலத்தை மட்டுமோ தனி பாத்திரங்களில் எடுத்துக் கொள்ளவேண்டும். அந்திரமந்திரத்தால் பிரோக்ஷித்து ஹ்ருதய மந்திரத்தினால் பூஜிக்க வேண்டும்.
357. தேனு முத்திரையில் - அம்ருதீகரணம் செய்து தாம்பூலம் முதலியவைகளை கொடுத்து முன் சொன்ன முறையிலே ராத்திரி சூர்ணத்தையும் கொடுக்க வேண்டும்.
358. சூர்ணோத்ஸவத்தை திரிசூலத்தால் கிராமத்திலோ ஆலயத்திலோ ஆரம்பத்திலும் விரைவாக செய்யக் கூடிய பரிசாரகர்களால் செய்ய வேண்டும்.
359. ஸமுத்ரம் முதலிய அதிகமான ஜலமுள்ள இடங்களில் செய்யும் தீர்த்த உத்ஸவம் மஹாதீர்த்தம் எனப்படும். சிறிய நீர்நிலைகளில் செய்வதை கவுதுக தீர்த்தம் போல் செய்யக் கூடாது.
360. கொட்டகை முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்ட இடத்தில் பிம்பத்தோடும் கலச ஸ்தாபனத்தோடும் தேவதைகளை அழைப்பதோடும் கூடியதாகவும்
361. தீர்த்த கார்யத்திற்காக விக்ரஹமின்றியும் தீர்த்தவாரி செய்யலாம் ஜலத்தின் நடுவில் இருந்து தீர்த்த ஸங்கிரஹணம் செய்யவில்லை எனில்
362. தீர்த்த ஸங்க்ரஹணம் செய்து மஹா தீர்த்தமாக செய்ய வேண்டும். ரக்ஷõ ஸூத்ர விஸர்ஜனம் செய்து பக்தர்களுடன் கூடி
363. சூலம் பேரம், இவைகளோடு மஹா தீர்த்தம் செய்ய வேண்டும். பல தேவாலயங்களிலிருந்து வந்த திரிசூலங்களோடு கூடவோ
364. திரிசூலங்கள் தேவதைகளோடு கூடியதாகவுமோ செய்யலாம். அல்லது பத்மம், என்ற அஸ்திரங்களோடும் சக்ரம் கூடியதாகவும் செய்யலாம்.
365. மஹாமோடி தேவதையுடன் இருப்பின் ராத்திரியில் தீர்த்தம் அனுஷ்டிக்க வேண்டும். பகலிலும் தீர்த்தோத்ஸவம் செய்யலாம். மாத்யாஹ்னிக கால தீர்த்தோத்ஸவம் உத்தமமாகும்.
366. முற்பகலில் தீர்த்தம், மத்யமமாகும். பிற்பகலில் அதமமாகும். சந்திரகிரஹணத்தின் பொழுது தீர்த்தத்தை ராத்திரியில் செய்யும் தீர்த்தம் உத்தமமாகும்.
367. அது வேண்டும் மோடி தேவதையுடன் இருந்தால் உத்தமோத்தமமாகும். ஸமுத்ரத்தில் திதிபிரதானமாகவும் மற்ற இடங்களில் நக்ஷ்த்ரபிரதானமாகவும் ஆகும்.
368. திதி நக்ஷத்ரம் இரண்டும் சேர்ந்து வருவது அரிதாகும். முற்பகலிலோ பிற்பகலிலோ திதி, நக்ஷத்ரம் சேர்ந்திருப்பதை எடுத்துக்கொள்ளவும்.
369. சமுத்திரம் அல்லது நதிகளில் நடுப்பகலில் தீர்த்தம் கொடுப்பது சிறந்தது. நக்ஷத்ரமோ திதியோ பகலில் எது அதிகம் உள்ளதோ அதுவே ஏற்றுக்கொள்ள தகுந்தது.
370. இரண்டு நாட்களில் நக்ஷத்ரம் திதி இவைகளில் நல்ல சேர்க்கை ஏற்படுமானால் சுபயோகங்களுடன் கூடிய சமயத்தில் செய்யலாம் தீர்த்த நக்ஷத்ரம் ஒரு மாதத்தில் இருமுறை வந்தால் பின்னால் செய்வதும் சிறந்ததாகும்.
371. அங்கும் முன்பு உள்ளதில் யோகம் சேர்ந்திருக்குமேயானால் முன்பு உள்ளதையே எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த மாதத்தில் எந்த நக்ஷத்திரத்தில் முன்பு அனுஷ்டிக்கப்பட்டுள்ளதோ
372. அந்த மாசத்தில் அந்த நக்ஷத்திரத்தில் பின்பும் செய்ய வேண்டும். ஸ்வாயம்புவ, தைவிக, ஆர்ஷிக லிங்கம்.
373. மானுஷ லிங்க விஷயத்தில் முன்பு அனுஷ்டித்த தீர்த்த நக்ஷத்திரம், மாத நக்ஷத்ரம் 2 மாதத்தில் ஏற்பட்டால் முன்பு கொடுத்த திதியோ நக்ஷத்திரத்தையோ எடுத்துக் கொள்வது சிறந்தது.
374. ஜலத்திற்கு நடுவில் தீர்த்தத்தை ஆசார்யன் செய்ய வேண்டும். அவகாஹனம் இரண்டாகச் சொல்லப்படுகிறது. பேரத்துடன் கூடியோ (பேரம்) பிம்ப மின்றியோ தீர்த்தவாரி செய்யலாம்.
375. கரையில் தனிமையாக விக்ரஹத்திற்கு ஸ்னபனம் வைத்தும் செய்யலாம். சந்தனம் முதலிய உபசாரங்களால் பூஜை செய்யலாம்.
376. நைவேத்யம் அங்கேயோ அல்லது ஆலயத்திலுமோ கொடுக்கலாம். தீபாராதனைக்கு பிறகு எல்லா மங்களங்களோடும் நந்தவனங்களில் இறைவனை சந்தோஷபடுத்த வேண்டும்.
377. கிராமபிரதட்சிணம் செய்தாலும் செய்யலாம் அல்லது எல்லா பக்த ஜனங்களோடும் சேர்ந்துமோ இல்லாமலும் பிரதட்சிணம் செய்தாலும் செய்யலாம்.
378. எல்லா மங்கள வாத்யங்களோடும் பூர்ணாஹூதியை செய்து சுத்தமான பரிசாரகர்களோடு உள் சுற்று சுற்றி
379. இறைவனையும், இறைவியையும் வித்யேஸ்வரர்களோடு கூட கர்பகிரஹத்தில் வைத்து லிங்கத்தில் பீடத்தில் முறையாக
380. இறைவனையும் இறைவியும், பூஜித்து சுற்றிலும் வித்யேஸ்வரர்களை முறையாக பூஜிக்க வேண்டும். யாகசாலையிலுள்ள அந்தந்த ஜலத்தால் பிரோக்ஷணம் செய்து சுத்தமான தீர்த்தத்தால் இறைவனை அபிஷேகம் செய்விக்க வேண்டும்.
381. பிறகு இறைவனை சக்திக்கேற்றவாறு பூஜிக்க வேண்டும். அன்று இரவு த்வஜ அவரோஹணம் (கொடி இறங்குதல்) செய்வது சிறந்தது ஆகும்.
382. மூன்றாவது ஐந்தாவது அல்லது ஏழாவது ஒன்பதாவது நாளில் பதினொன்று பதினான்கு அல்லது பதினைந்தாவது நாளில்
383. அல்லது பதினேழு அல்லது பத்தொன்பதாவது நாளில் செய்யலாம்.
384. மூர்த்தி ஹோமம், பிறகு திசாஹோமம் செய்ய வேண்டும். த்வஜம் முதல் தீர்த்தம் வரையில் தின எண்ணிக்கை இருக்குமேயானால்
385. மறுபடியும் உத்ஸவம் ஆரம்பித்து தீர்த்தம் வரையில் எல்லாம் செய்ய வேண்டும். கொடியிறக்கும் தினத்தில் சுத்த ஸ்நபனம் செய்ய வேண்டும்.
386. லிங்கம், மூர்த்தி, விருஷபம், சூலம், கொடி இவைகளுக்கு அர்ச்சனைபடி ஸ்நபனம் செய்யவேண்டும். புஷ்பமாலைகளால் கோயிலை அலங்கரிக்கவேண்டும்.
387. கர்ப்பகிரஹத்திலிருந்து கோபுரம் வரையில் தன் சக்திக்கு தக்கவாறு கருமையான நற்புகையுடன் கூடிய தூபத்தால் உபசரிக்க வேண்டும்.
388. பலவகை நைவேத்யங்களை முறைப்படி கொடுத்து இறைவனை மகிழ்விக்க வேண்டும். பிறகு சண்டிகேஸ்வர பூஜையை ஹோமத்துடனோ அல்லது ஹோமமில்லாமலோ செய்யலாம்.
389. பிறகு கிராமபலியை அன்ன லிங்கத்தோடு கூடியதாகவும் திரிசூலத்தோடு சண்டநாதரோடு கூடியவராகவும் செய்யவும்.
390. பேரிகை, மத்தளம், படஹம், காளஹம், ஸ்ரீகண்டம், சங்கம், போன்ற வாத்யங்களை பலிகாலத்தில் வாசிக்க வேண்டும்.
391. கிராமத்தை சுற்றியுள்ள பிரம்மா முதலிய தேவர்களை விஸர்ஜனம் செய்து திவஜத்தின் ஆரம்பத்தில் அல்லது முடிவில் பலி கொடுக்க வேண்டும்.
392. கொடியை இறக்கி அந்த விருஷபத்தை விருஷப மூர்த்தத்தில் சேர்க்கவேண்டும். த்வஜாவரோஹணம் செய்யும் முன்போ செய்தபின்போ பலி கொடுக்க வேண்டும்.
393. யஜமானர் ஆசார்யனை வஸ்திரம், பவித்ரம், தர்ஜனி இவைகள் கொடுத்து கவுரவிக்க வேண்டும். அங்குரார்ப்பண காலத்தில் த்வஜாரோஹண காலத்திலும்
394. யாக அதிவாஸ காலத்திலும் ஹோம ஆரம்பகாலத்திலும் இரண்டு ஸந்திகளிலும் அல்லது ஒரு சந்தி கால பூஜைகளிலும் ஆரம்பத்திலோ அல்லது முடிவிலோ
395. நிருத்த மூர்த்தி (நடராஜர்) உத்ஸவத்திலும் தீர்த்தத்திலும் சுத்த ஸ்நபன காலத்திலும் தட்சிணை கொடுக்க வேண்டும். அந்த தட்சிணை மூன்று விதமாகும்.
396. ஆசார்யனுக்கு உயர்ந்த தட்சிணை கொடுக்க வேண்டும். ஐந்து நிஷ்கம் அதமம் இரண்டு மடங்கு மத்யமம், மூன்று மடங்கு உத்தமம்.
397. அதில் பாதி எண்ணிக்கையுடன் கூடியது அதிகமாக சொல்லப்படுகிறது. மேற்கூறியதில் இரண்டு மடங்காக கொடுப்பதும் உத்தமமென்று கூறப்பட்டுள்ளது. வேறு விதமாகவும் தட்சிணை கூறப்படுகிறது.
398. பிரதி தினமும் பாதி நிஷ்கமோ, அதில் பாதியோ கொடுக்க வேண்டும். பக்தோத்ஸவம் பிறகு செய்யலாம் அல்லது பதினைந்து நாட்களுக்கு முன்பாகவோ செய்ய வேண்டும்.
399. உத்ஸவத்தின் ஆரம்பம் அல்லது நடுவிலோ பக்த உத்ஸவம் செய்யலாம் வருடாந்திர உத்ஸவத்தில் மாஸோத்ஸவமானது
400. பலிஹோமம் இவைகளோடு கூடியதாகவுள்ள திருவீதியிலாவுடனுமோ பலியின்றியுமோ பிம்ப திருவீதி உலா செய்யலாம்.
401. மாஸோத்ஸவம் இரண்டு வந்தால் இவ்விதமே செய்ய வேண்டும். ஒருநாள் உத்ஸவத்தை போல் மாஸோத்ஸவம் செய்ய வேண்டும்.
402. ஒரே மாதத்தில் ஒன்றோ பலவோ உத்ஸவம் வந்தால் அங்குரார்பண பூர்வாங்கமாகவோ அல்லது இல்லாமலோ செய்யலாம்.
403. ஒருநாள் உத்ஸவம் பேரீ அடித்தல் முன்னதாக செய்ய வேண்டும். இரண்டு ஸ்தண்டிலங்கள் செய்து சூலத்தை ஒன்றில் வைக்க வேண்டும்.
404. அதன் முன்பு பேரியை வைத்து பிறகு புண்யாஹம் செய்ய வேண்டும். அஸ்த்ர தேவரையும் பேரியையும் பூஜித்து பேரியை அடிக்க வேண்டும்.
405. பிறகு பிரதிஸரம் (காப்பு) தெய்வத்திற்கும் சூலத்திற்கும் முறைப்படி கட்டி பிரகார பிரதட்சிணம் செய்து யாகசாலையில் நுழைந்து
406. ஸ்தண்டிலத்தில் சூலத்தை ஸ்தாபனம் செய்து வேதிகைக்கு மேலே மங்கள கரமான ஸ்தண்டிலத்தில் வர்த்தனீ ஸஹிதமாக சிவகும்பத்தை ஆசார்யன் வைக்க வேண்டும்.
407. சுற்றிலும் எட்டு கலசங்களையோ கடங்களையோ வைக்க வேண்டும். புண்யாகவாசனம் செய்து அஸ்த்ர மந்திரத்தால் பிரோக்ஷணம் செய்ய வேண்டும்.
408. தங்க பத்மம் முதலியவைகளை இட்டு வஸ்த்ரம் யக்ஞஸூத்ரம் கூர்ச்சம் இவைகளோடு கூடியதாக இரண்டிற்கும் அளித்து
409. கும்பங்களில் மாவிலை பழம், இவைகளை சேர்த்து நடுவில் கும்பத்தில் சிவனையும், வர்த்தனியில் மனோன்மணியையும், அஷ்டவித்யேஸ்வரர்களை கலசங்களிலும் பூஜை செய்ய வேண்டும்.
410. திவாரங்களை பூஜை செய்து நந்தி முதலிய திவார பாலகர்களை ஸ்தலத்திலுள்ள கலசங்களிலும் பூஜை செய்ய வேண்டும். தோரணங்கள் அஷ்டமங்களங்கள் இவைகளை பூஜை செய்ய வேண்டும்.
411. தசாயுதங்களையும் மற்றும் அஷ்டமங்களம் போன்றவையும் வைத்து பூஜை செய்யலாம். இல்லாமலும் செய்யலாம். குண்டத்திலோ ஸ்தண்டிலத்திலோ ஹோமம் செய்ய வேண்டும்.
412. ஐந்து அல்லது ஓர் குண்டத்தில் முன் சொன்ன பொருள்களைக் கொண்டே ஹோமம் செய்ய வேண்டும். பிறகு கிராமபலி செய்ய வேண்டும். பலி பிம்பத்தோடு கூடவோ அல்லது இல்லாமலும் செய்யலாம்.
413. இவ்விதம் இரவில் செய்ய வேண்டும். காலையில் யாகேஸ்வரரை பூஜிக்க வேண்டும். விக்ரஹத்தோடு கூட ஹோமம் பலி இரண்டும் முடிந்தவுடன்
414. ஆசார்யன் ஆலயம் சென்று அங்கு சூர்ணோத்ஸவம் செய்ய வேண்டும். பிறகு தீர்த்தோத்ஸவம் இங்கு சொல்லப்படவில்லையெனில் முன்பு போலவே செய்ய வேண்டும்.
415. பேரீதாடனம் இல்லாமல் அனைத்தையும் காலையிலும் செய்யலாம். உடனே அதிவாஸம் செய்து முன்புபோல் அனைத்தையும் செய்யவேண்டும்.
416. சூர்ணோத்ஸவம் இல்லாமலும் இந்த உத்ஸவம் செய்யலாம். அதன் முறை இங்கு சொல்லப்படுகிறது. ஆலயத்தில் பலிதானம் திருவீதியு லாவையும் செய்யவும். தீர்த்தம் இல்லாமல் உற்சவம் செய்யலாம்.
417. வீதிவலம் பிற்பகலிலோ மாலையிலோ செய்யலாம். தீர்த்தவாரி இருந்தால் ஸ்வாமி வீதி வலம் வருதலும் பலிகாலத்தில் வேறு பிம்பம் வைத்து
418. வலம் வருதலோ செய்யலாம். வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது. பலி ஹோமம் முதலியவைகளை செய்யாமல் வலம் வருதலையோ மட்டும் கூட செய்யலாம். தெய்வத்திற்கு ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டுமென தினங்களின் உத்ஸவத்திலும் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது.
419. கர்த்தாவின் விருப்ப நாட்களிலும் அதற்கு உரிய நாளிலோ மேற்கூறியபடி செய்யலாம். கர்த்தாவின் ஜன்ம நக்ஷத்திரத்திலோ அல்லது மரண நாளில் அல்லது மாதாந்திர திருவாதிரை நக்ஷத்திரத்திலோ
420. சதுர்தசி, அஷ்டமி, பவுர்ணமி அல்லது அமாவாசை உத்தராயண தட்சிணாயனம் விஷுவ புண்யகாலம், கிரஹணங்கள் தமனோத்ஸவம் என்ற மரிக்கொழுந்து சாற்றுதலிலும்.
421. பவித்ரோத்ஸவம், கார்த்திகை தீபம் மற்றும் வருடசிறப்பு தினங்கள் புதிய தண்ணீர் வருதல்
422. பூரம் நக்ஷத்திரம், நவ நைவேத்ய கர்மாவிலும் மற்ற மங்கள கார்யங்களிலும் ஒருநாள் உத்ஸவம் செய்யலாம்.
423. இவ்விதம் ஒவ்வொரு வருடமும் போகத்திற்கும் அல்லது மோக்ஷத்திற்காகவும் செய்ய வேண்டும். ஞாயிறு முதல் வார பூஜையும் முறைப்படி செய்ய வேண்டும்.
424. பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம் மற்றும் ஸ்நபனங்களால் இறைவனை அபிஷேகம் செய்ய வேண்டும். நிறைய சந்தனம் புஷ்பம் முதலியவைகளால் இறைவனை பூஜை செய்ய வேண்டும்.
425. (ரோஜா) தலாரவிந்தம், நாயுருவி, தாமரை துளசி, பில்வ பத்ரம், விஷ்ணுகிராந்தி இவைகள் முறையாக
426. ஞாயிற்றுகிழமை முதலான கிழமைகளில் மேல் கூறிய பத்ரங்களால் பூஜிக்கலாம். ஞாயிற்றுக் கிழமை மாணிக்கமும் திங்கள் முத்துவும்
427. பவழம் செவ்வாய் கிழமையிலும், புதன் கிழமையில் மரகதமும் வியாழக்கிழமை புஷ்பராகமும் வெள்ளிக்கிழமை வஜ்ரமுமாகும்.
428. சனிக்கிழமை இந்த்ர நீலமும், சாத்தலாம். மற்ற எல்லா ரத்னங்களும் எப்பொழுதும் சாத்தலாம் இந்த முறைப்படி சாத்துவது சிறந்தது
429. அந்தந்த நிறமுடைய புஷ்பம் வஸ்திரம் இவைகளை சாத்த வேண்டும்.
430. அந்தந்த நிறமுடைய நைவேத்யம் அந்தந்த வாரத்திற்கு உட்பட்டு நிவேதனம் செய்ய வேண்டும். வாரபூஜையின் முடிவில் வாரோத்ஸவம் செய்ய வேண்டும்.
431. வேண்டியதை அடைய ஞாயிற்றுகிழமை உத்ஸவத்தை மட்டுமோ நடத்தலாம். ஞாயிறு உத்ஸவம் கிருஹணங்களின் பீடை நீங்கவும் சிறப்பாக ஆரோக்யம் பெறவும் ஆகும்.
432. உலக நன்மைக்காகவும் எந்த கிரஹத்தால் துன்பமேற்பட்டுள்ளதோ அந்த கிருஹ வாரத்தில் பூஜை செய்ய வேண்டும். அந்த வார உத்ஸவத்துடன் சேர்த்து செய்ய வேண்டும்.
433. அந்தந்த கிழமைக்கு தக்கவாறு சந்தனம் முதலிய திரவ்யங்களை சேகரிப்பது, செய்தும் செய்யாமலும் இருக்கலாம். ஸம்வத்ஸர உத்ஸவம் கூறி மாஸோத்ஸவத்திலும் அவ்வாறே அனுஷ்டிக்கவும் என்றும்
434. வாரோத்ஸவத்திலும் சிறப்பு சொல்லப்படுகிறது. முற்பகல் பிராமணர்களுக்கும் நடுப்பகல் க்ஷத்ரியர்களுக்கும்
435. மாலை வைச்யர்களுக்கும் மற்றவர்களுக்கும் நடு இரவிலும் கொடி ஏற்றப்பட வேண்டும். கொடியேற்றம் முதலாகவோ
436. பேரீ அடித்தல் முதலாகவோ பாலிகை தெளித்தல் முதலாகவோ பிராம்மணர் முதலான வர்ணத்தவர்களுக்கு செய்யலாம். மற்றவர்களுக்கு பாலிகை தெளித்தல்தான் முதலாவதாக செய்ய வேண்டும்.
437. நகரத்தில் த்வஜம் முன்னதாகவும் மங்கள கார்யங்களில் பேரீதாடனம் முன்னதாகவும் பெரிய நகரங்களில் அங்குரம் முன்னதாகவும் செய்யலாம். அது போல் நான்காவது நிலையில் உள்ளவர்களுக்கும் உண்டு.
438. நான்காயிரம் அந்தணர்களுக்கு மேல் இருக்கும் கிராமத்தில் மற்றும் நகரங்களிலும் உத்ஸவங்களுக்கு கலப்பு தோஷம் இல்லை என கூறப்பட்டுள்ளது.
439. ஏழு ஆறு, ஐந்து அல்லது நான்கு முழத்தில் த்வஜதண்ட வேதிகை கட்டவேண்டும். முதல் மூன்று வர்ணத்தவர் தவிர மற்றவர்களுக்கு இது மாறுதலாக அமையும்.
440. ஒரு த்வஜத்தில் மற்றொரு த்வஜத்தை செய்யக் கூடாது. விருஷபத்வஜருக்கு செய்யலாம். ஒரு உத்ஸவத்தில் மற்றொரு உத்ஸவம் செய்யக்கூடாது. சைவோத்ஸவம் சிறந்தது.
441. எல்லோரும் பொருத்தமான நக்ஷத்திரத்தில் த்வஜாரம்பம் செய்வது சிறந்தது. கொடிக்கு வெள்ளை, சிகப்பு, மஞ்சள் மூன்றும் அந்தணர் முதலான வர்ணத்தவர்களுக்கும் பொருந்தும்.
442. நான்காவது வர்ணத்தவர்க்கு மஞ்சள் நிறம் எல்லோர்க்கும் வெண்மை நிறத்தை பொதுவாக வைத்துக் கொள்ளலாம். கொடி ஆரம்பத்தில் விருஷபத்தலையும் வால் அடிப்பகுதியிலும் இருக்க வேண்டும்.
443. த்வஜ பிரதட்சிண காலத்தில் ஆசார்யன் முன்னால் சென்றாலும் செல்லலாம். கிழக்கில் காந்தாரம் தெற்கில் கவுசிகம்.
444. மேற்கில் காமரம், வடக்கில் தர்கராகம், இவ்விதம் ஸ்வரங்கள் சொல்லப்பட்டன.
445. த்வஜாரோஹண காலத்தில் நான்கு ராகமோ ஓர் ராகமோ வாஸித்து த்வஜாரோஹம் முதல் தீர்த்தம் வரையில் இரவில் கிராமபலி போட வேண்டும்.
446. அல்லது வேறு இடத்தில் உத்ஸவம் நடக்கும் போதும் நித்யோத்ஸவமுள்ள இடத்திலும் தேவர்களின் பலி த்வஜத்தின் அடியிலேயே கொடுக்கப்படவேண்டும்.
447. பிராம்மணர் முதலிய பேதங்களில் வடக்கிலிருந்து குண்டமேற்படுத்தி பிரதட்சிண முறையாகவும் ஒரே அக்னி குண்டபூஜையும் செய்யலாம்.
448. நன்கு புசித்த சண்டரூபம் தரித்த பிரம்மசாரி தன்னை சண்டன் போல் தியானித்து த்வஜ தண்டத்தை சேதனம் செய்தாலும் செய்யலாம்.
449. உத்ஸவம் அல்லது பவித்ரம் உத்ஸவம் அல்லது இரண்டையும் செய்யலாம். ஒன்பதாவது நாளில் கொடிக்காக அங்குரார்ப்பணம் செய்து ஏழாவது நாளில் உத்ஸவத்திற்காக அங்குரார்ப்பணம் செய்ய வேண்டும்.
450. தீர்த்தாங்குரம், அதே எண்ணிக்கையில் உடைய நாட்களில் செய்யவும் என்ற இந்த முறை எங்கும் எப்பொழுதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கலாம் நடுப்பகலில் த்வஜ பூஜையையும் ஸோம கும்பத்தில் ஜலத்தை
451. வைத்து பூஜையையும் அந்த கும்ப பூஜை ராத்திரியில் செய்ய வேண்டும். ரக்ஷõபந்தனம் செய்யப்பட்ட சுவாமியை கிராமத்திலிருந்து வெளியே எடுத்து செல்லுதலும்
452. வேட்டையாடும் உத்ஸவம் விருப்பப்பட்ட காலத்திலும் செய்ய வேண்டும். காமிகாகமத்தில் வருடமானது சவுரம், சாந்தரம் என்பதாக இருகூறாக வகுக்கப்பட்டுள்ளது.
453. சவுரமானம் உயர்ந்ததாகும். சாந்தரமானப்படி செய்வது நடுநிலையாகும். சாவனம் என்ற வருஷக் கணக்கு முறையானது அதமமாகும். ஸாவனமானத்தால் பூஜைகள் செய்யக்கூடாது.
454. உத்ஸவம் முதலிய காலங்களில் பிரதிஷ்டை முதலியவைகளை செய்யக்கூடாது. சாந்தி, ஹோமம் முதலியன செய்து பிரதிஷ்டை முதலியவைகள் வேண்டுமானால் செய்யலாம்.
455. அல்லது மற்றொரு முறையால் உத்ஸவம் சொல்லப்படுகிறது. த்வஜா ரோஹண பூர்வமாக ஒரு கொடியை ஏற்றி
456. கொடியேற்றிய அதே தினத்தில் சூரியன் மறைந்தபொழுது யானை முதலியவைகளில் ஏறப்பட்டவனால் தீர்த்த தினத்தை அறிவிக்கப்படவேண்டும்.
457. மனைவியோடு கூடி யானையின் மேல் ஏறிய சண்டாளன் பேரி முரசை அடித்துக்கொண்டு மிகவும் சப்தமாக கொடியேறிய தினத்திலேயே இரவிலேயே அறிவிப்பை செய்ய வேண்டும்.
458. அஸ்திர தேவரிடத்தின் முன்பாக முன்பு கூறப்பட்டபடி தேவதைகளை ஆவாஹித்து கிராம பலியின்றி தீர்த்த நாளை தெரிவித்து
459. ஆலயத்திலே இதைத் தெரிவித்து அவ்விடமிருந்து நீர் நிலையை அடைந்து அங்கு இரண்டு ஸ்தண்டிலத்தை அமைக்க வேண்டும்.
460. ஒரு இடத்தில் சூலம் மற்றொரு இடத்தில் கலசங்களை வைக்க வேண்டும். ஒன்பது கலசங்களால் சூலத்தை அபிஷேகம் செய்து அந்த சூலத்தை மூழ்க வைக்க வேண்டும்.
461. திருக்கோயிலை அடைந்து அந்த நாளிலிருந்து பத்தாவது நாளிலோ, அங்குரார்பண பூர்வமாக யாகாரம்பம் மறுபடியும் செய்யவேண்டும்.
462. ஒரு ஹோமத்தோடு கூடியதாக கிராமபலி முதலியவைகளை போடவேண்டும். தினமும் காலையில், மாலையிலும் ஸ்வாமி திருவீதியுலா இருக்க வேண்டும்.
463. ஐந்தாவது நாளில் அஸ்தர மந்திரத்தால் அபிமந்த்ரணம் செய்யப்பட்ட மணலை உள்ளும், வெளியேயும் எங்கும் இரைத்தல் வேண்டும்.
464. பதினெட்டாவது தினத்தில் அங்குரார்பணம் செய்யவேண்டும். தீர்த்தத்திற்காக பதினெட்டாவது தினத்தின் இரவில் ஆலயத்தின் எட்டு திசைகளிலும்
465. திக்பாலகர்களுடைய வாகனங்களால் அடையாளம் செய்யப்பட்ட அல்லது அவர்களின் ஆயுதத்தால் அடையாளமிடப்பட்ட அல்லது விருஷபத்தை அடையாளமாக உடைய எட்டுக் கொடிகளை ஆசார்யன் ரித்விக்குகளோடு கூடியவனாய் ஏற்றவேண்டும்.
466. அது முதற்கொண்டு ஹோமம் சிறப்பாக செய்யவேண்டும். அதன் முடிவில் பலிதானமும் திருவீதி உலாவும் செய்யவேண்டும்.
467. இவ்விதம் ஒன்பது நாட்கள் செய்து பத்தாவது நாளில் தீர்த்தம் ஆகும். எட்டு கொடிகளையும் அன்று இரவே அவரோஹனம் செய்து
468. அன்றையிலிருந்து பல வாத்யங்களோடும் பல இசைகளோடும் பல ஆடல்களோடும்,
469. முறைப்படி கிராம பிரதட்சிணம் செய்ய வேண்டும். ஏழாவது நாள் இப்படி செய்து பிறகு தீர்த்தக்கரையை அடைந்து
470. ஜல தீரத்தில் இரண்டு ஸ்தண்டிலங்களை வைக்கவேண்டும். ஒன்றில் சூலத்தையும் மற்றொன்றில் கலசங்களையும் ஸ்தாபனம் செய்யவேண்டும்.
471. ஒன்பது கலசங்களால் சூலத்தை அபிஷேகம் செய்து அந்த சூலத்தை ஜலத்தில் முழுக வைக்கவேண்டும். எல்லா வாத்யங்களுமின்றி ஆலயத்தில் நுழைந்து
472. ஏழுநாட்களுக்கு பிறகு மவுனமாகச் சென்று சண்டிகேஸ்வரரை முன்னிட்டுக் கொண்டு தெய்வ பிம்பங்களோடு சென்று
473. பலி ஹோமம் இல்லாமல் ஏழுநாள் பூஜை செய்ய வேண்டும். ஸ்நபனம் ஹோமம், இவைகளோடு ஏழுநாள் இருக்கவேண்டும்.
474. அதன் முடிவில் திரிசூலத்தோடு தீர்த்தம் கொடுக்கவேண்டும். அன்று இரவில் முன் சொன்ன முறையில் கொடி இறக்குதல் செய்யவேண்டும்.
475. வீதி உலா இல்லாவிட்டாலும் இவ்விதம் விதியை செய்யவேண்டும். புதிய அன்னலிங்கம் செய்தாவது திக்பாலகர்கள், அவர்கள் அஸ்திர தேவதைகளை
476. அந்த திரிசூலத்தினாலோ பலியை கிராமங்களில் செய்யலாம். நித்யோத்ஸவத்தில் அன்னலிங்கம் முதலியவைகளை பத்து எண்ணிக்கைகளாகவோ செய்ய வேண்டும்.
477. பன்னிரண்டு ஆண்டுகளின் முடிவில் த்வஜ ஸ்தாபனம் செய்யலாம். தேய்மானம் மலினமடைந்தால் அதை எடுத்து வேறு புதிய கொடிக் கம்பத்தை ஸ்தாபனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தர காமிக மஹாதந்த்ரத்தில் மஹோத்ஸவ விதியாகிற ஆறாவது படலமாகும்

No comments:

Post a Comment