Tuesday, July 1, 2014

பாக்கியங்கள் நல்கும் ஹோமங்கள்!

அறுகோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து, 
அதில் வன்னி மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டுமாம். 
அப்படி தீ வளர்க்கையில் வழமை போலவே அக்கினி மூல மந்திரமான
 “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட்ஸ்வாஹா ,” என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்த்திட வேண்டுமாம்.



தீ வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான


 “ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா

 புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி ஸ்வாஹா ,” 
என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே
 அறுகினை, பசு நெய்யில் தோய்த்து போட வேண்டும் என்கிறார். 
இப்படி 1008 முறை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர்.





இந்த ஹோமத்தினை தொடர்ந்து ஒரு மண்டலம் 


அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வந்தால் பிரம்மத்தை உணரலாமாம்.

 அதையே தொடர்ந்து இரண்டு மண்டலம் அதாவது 96 நாட்கள் செய்து வர
 300 வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார் அகத்தியர்.
----------------------------------

என்கோண வடிவத்தில் ஹோம குண்டம் ஒன்றினை அமைத்து, 
அதன் முன்னர் ஹோமம் செய்பவர் கிழக்குமுகமாய் அமர்ந்து கொள்ள வேண்டும்.
 பின்னர் குருவினையும், குலதெய்வத்தினையும் வணங்கிய, 
அரச மரத்தின் குச்சிகளைக் கொண்டு ஹோம குண்டத்தில் தீ வளர்க்க வேண்டும் என்கிறார். இந்த தீயை வளர்க்கும் போது அக்கினியின் மூல மந்திரத்தை சொல்லியவாறே 
தீயை உருவாக்க வேண்டும் என்கிறார்.
 அக்கினியின் மூல மந்திரம் பின் வருமாறு.

"ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா"

தீயை நன்கு வளர்த்த பின்னர் அடுத்த கட்டமாக 
“புவனை”யின் மந்திரமாகிய
 "ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா
 புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா" 
என்ற மந்திரத்த்தை உச்சரித்தவாறே
 எள் பொரியினை நெருப்பில் இட வேண்டும் என்கிறார். 
இந்த மந்திரத்தை 1008 தட்வை உச்சரித்து
 எள் பொரியினை நெருப்பில் போட
 நவகிரகங்களினால் உண்டாகும் 
தோஷங்கள் யாவும் நிவர்த்தியாகும் என்கிறார் அகத்தியர்.
--------------------------------------------------------
கருங்காலி மரம் மற்றும் நாவல் மரத்தின் குச்சிகளைக் கொண்டு 
ஹோம குண்டத்தில் தீயை வளர்க்க வேண்டும். 
தீ வளர்க்கும் போது அக்கினியின் மூலமந்திரத்தை உச்சரித்து வரவேண்டும்.

அக்கினியின் மூலமந்திரம்...

"ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா"

தீ நன்கு எரிய துவங்கிய பின்னர் புவனையின் மந்திரத்தைச் சொல்லி
 பசும்பால், சந்தனம், தேன் கலந்த கலவையினை 
நெருப்பில் விடவேண்டும் என்கிறார். 
இந்த முறையில் புவனையின் மந்திரத்தை
 1008 தடவைகள் சொல்லிட வேண்டுமாம். 
புவனையின் மூல மந்திரம்...

"ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா 
புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா"

இப்படி செய்தால் புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு 
புத்திரபாக்கியம் கிட்டும் என்கிறார் அகத்தியர். 
ஹோமம் செய்த மறு மாதமே கரு உண்டாகி 
பத்தாம் மாதத்தில் மகப்பேறு சித்திக்குமெனவும் கூறுகிறார். 
இந்த ஹோமத்தினை யாரும் இதை வீட்டில் செய்யலாம் என்கிறார் அகத்தியர்

-----------------------------------------
அகத்தியர் அருளிய “புத்திரபாக்கியம்” தரும் ஹோமம்!

திருமணமான பலர் தங்களுக்கு புத்திரபாக்கியம் தள்ளிப் போவதைக் கண்டு 
மனம் வெதும்பி வாடுவதைப் பார்த்திருக்கிறோம். 
இன்றைய நவீன அலோபதி மருத்துவம் எத்தனையோ உயரங்கள் 
வளர்ந்து இக் குறையினை நிவர்த்திக்க 
நல்லபல தீர்வுகளைத் தந்திருக்கிறது.

எனினும் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு காலகட்டத்தில், 
குழந்தையின்மைக்கான தீர்வாக அகத்தியர்
 இந்த ஹோமத்தினை முன்வைக்கிறார். 
இதன் சாத்திய, அசாத்தியங்கள் ஆய்விற்கும், விவாதத்திற்கும் உட்பட்டவை.

இந்த ஹோமத்திற்கு நாற்கோண வடிவத்திலான 
ஹோம குண்டத்தினை பயன் படுத்திட வேண்டும். 
ஹோமம் செய்பவர் கிழக்கு முகமாய் அமர்ந்து செய்திடல் வேண்டும். 
கணவணும், மனைவியும் ஒருங்கே அமர்ந்து செய்தால் இன்னமும் சிறப்பு. 
இந்த ஹோமத்தினை எவ்வாறு செய்திட வேண்டுமென்பதை
 அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.

சித்ததான சித்துகளுக் குறுதியான

சிவசிவா புவனைதிரு மந்திரந்தன்னை

பத்தாசை வைத்து மன துறுதிகொண்டு

பாலுடன் சந்தனமொடு தேனுங்கூட்டி

சுத்தான மனம்நிறுத்தி யேகமாகி

கருத்தாய்நீயும் சிறப்புட னோமம்பண்ண

வத்தாத பாக்கியசந் தான பாக்கியம்

வளருமடா ஒன்றுபத்தாய் மனங்கண்டாயே.
----------------------------------------------------
பாவம் போக்கி, செல்வம் தரும் ஹோமம்!

பாவச் செயல்களை செய்வதன் மூலமாய்
 ஒருவன் தன் வாழ்க்கையில் சம்பாதிக்கும் பாவங்களின் வகைகளை 
அகத்தியர் பின்வருமாறு பட்டியலிடுகிறார்.

"காணவே யின்னமொரு சூட்சங்கேளு

கருணையுட னுலகத்தோ டிருக்கும்போது

பூணவே கண்ணாரக் கண்டபாவம்

புத்தியுடன் மனதாரச் செய்தபாவம்

பேணவே காதாரக் கேட்டபாவம்

பெண்வகைகள் கோவதைகள் செய்தபாவம்

ஊணவே பலவுயிரைக் கொன்ற பாவம்

ஒருகோடி பாவமெல்லா மொழியக்கேளே"


- அகத்தியர் -

வாழும் காலத்தில் நம்மைச் சுற்றி நடக்கும்


 பாவச் செயல்களை பார்ப்பதால் உண்டாகும் பாவம், 

தவறென அறிந்தும் செய்கின்ற செயல்களினால் உண்டாகும் பாவம், 

தீயவைகளை கேட்பதனால் உண்டாகும் பாவம், 

பெண்களுக்கும், பசுக்களுக்கும் கொடுமை செய்வதால் ஏற்படும் பாவம், 

உணவிற்காக பிற உயிர்களை கொல்வதால் உண்டாகும் பாவம் 

என பாவத்தின் வகைகளை பட்டியலிடுகிறார். 

இப்படி நாம் சேர்த்த கோடிக் கணக்கான பாவங்களை நீங்கிட
வழியொன்று இருப்பதாக அகத்தியர் கூறுகிறார்.

அதென்ன வழி... அதனை அகத்தியர் மொழியிலேயே பார்ப்போம்.

"ஒழியாத பாவமெல்லா மொழியமைந்தா

உனக்குறுதி சொல்லுகிறே னுண்மையாக

வழியாக ஓமகுண்டம் நன்றாய்ச்செய்து

சுழிவாக ஆலரசு சமுத்துதன்னால்

சுத்தமுட னக்கினியை வளர்த்துமைந்தா

தெளிவாகச் சொல்லுகிறேன் நன்றாயக்கேளு

மார்க்கமுடன் புவனையுட மந்திரந்தன்னால்

சிவசிவா நவதானியங்கொண் டோமஞ்செய்யே"

No comments:

Post a Comment