Tuesday, July 1, 2014

பிறவி வேண்டும்:

பிறவி வேண்டும்:
     மனிதப் பிறவி வேண்டும் என்று அப்பரடிகள் கூறுவது கருத் துப் புரட்சிபோல் தோன்றும் வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை (குறள் 362) என்ற நெறி பிறழாத் தவவேந்தரா இவ்வாறு கூறுகின்றார் என்று தோன்றும்.
     ஆனால், குனித்த புருவம், கொவ்வைச் செவ்வாய், குமிண் சிரிப்பு, பனித்தசடை, பவளமேனி, பால்வெண்ணீறு, எடுத்த பாதம் ஆகியவற்றைக் காணப்பெற்றால் தான் மானிடப் பிறவி வேண்டுவது என்று விளக்கங் கூறுங்கால் அமைதியும் இன்பமும் கொள்கின்றோ மல்லவா உயிராவணம் இருந்து உற்று நோக்கி உள்ளக்கிழியில் உருவெழுதி உருகி உரைக்கும் அப்பர் அடிகள் அருட்கவிதை இது:
குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே.
(தி.4. .81. பா.4)
     இத்திருப்பாடல் அழகிய சொல்லாட்சியும், அரும்பொருட் செறிவும், அடைமொழிச் சிறப்பும், கற்பனையிற் கண்டாலும் கனிவிக் கும் அருள்நலமும் உடைய அருட்பனுவல் திருவிருந்தாக உள்ள மையை தமிழ் அன்பர்களும் சமய அன்பர்களும் உணரலாம்.

No comments:

Post a Comment