Thursday, July 10, 2014

எங்கு குளித்தாலும் புண்ணிய நதிகளை முதலில் வணங்க வேண்டும்

பாத்ரூமில் நுழைந்ததும் தன்னை மறந்து பாடுவது சிலரது இயல்பு. ஆனால், சாஸ்திரம் இதைப் பற்றி என்ன சொல்கிறது என்று கேளுங்கள்.
எங்கு குளித்தாலும், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய ஏழு புண்ணிய நதிகளையும் முதலில் வணங்க வேண்டும். அதற்குரிய ஸ்லோகமாக, ""கங்கே ச யமுனே ச கோதாவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு!'' என்று சொல்ல வேண்டும்.
அதன் பின் இஷ்ட தெய்வத்திற்குரிய ஸ்லோகமோ அல்லது மந்திரமோ சொல்லலாம். ஏதும் தெரியாதவர்கள் மவுனமாக நீராட வேண்டும். வீண்பேச்சோ, கண்ட பாட்டுகளையோ சத்தமிட்டுப் பாடக்கூடாது. இதனால், நீருக்கு அதிபதியான வருணன் கோபம் கொள்வதோடு, மேனியழகைக் குறையச் செய்து விடுவதாக தர்ம சாஸ்திரம் கூறுகிறது.

No comments:

Post a Comment