Thursday, July 17, 2014

மனத்தின் ஏழு நிலைகள்

மனத்தின் ஏழு நிலைகள்
ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுகிறார்: மனம் உலக விஷயங்களைச் சிந்திக்கும் போது லிங்கம், குஹ்யம், நாபி எனும் மூன்று ஸ்தானங்களில் சஞ்சரிக்கும்.. அந்த நிலையில் உயர்ந்த மனோ பாவங்கள் எழுவதில்லை. காமினி காஞ்சனத்திலேயே அழுந்திக் கிடக்கும் (காமினி காஞ்சனம்= பெண் ஆசை, தங்கம்/செல்வம்/பணம் மீது ஆசை).
மனத்தின் நான்காவது ஸ்தானம் இருதயம். இந்த இடத்துக்கு மனம் வரும்போது முதன் முதலில் ஆத்ம எழுச்சி உண்டாகிறது. இந்த நிலையில் மனமானது பெண்ணாசை, பொன்னாசைகளில் ஒருபோதும் செல்வதில்லை.
மனத்தின் ஐந்தாவது ஸ்தானம் கழுத்து. அங்கு வரும்போது அஞ்ஞானம் எல்லாம் அகல்கிறது. ஆறாவது ஸ்தானம் புருவ மத்தி. அங்கு வரும்போது இரவும் பகலும் இறைவனின் திவ்ய தரிசனமே தென்படுகிறது.
தலைதான் மனத்தின் ஏழாவது நிலை. அங்கு சமாதி உண்டாகிறது. தன் நினைவே கிடையாது. உலக வியாபாரங்கள் அனைத்தும் அறவே ஒழிந்து பரமானந்தம் கிட்டுகிறது.
இந்த ஏழு ஸ்தானங்களே யோக நூல்களில் மூலாதாரம், ஸ்வாதி ஷ்டா னம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, ஸஹஸ்ராரம் என்று கூறப்படுகின்றன.
ராமகிருஷ்ண பரமஹம்சரின் புற்று நோய்
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் புற்று நோயால் ‘கஷ்டப்பட்டு வந்தார்” சசாதர பண்டிதர் அவரைப் பார்த்து,
ஸ்வாமி, யோக சக்தியால் நீங்கள் ஏன் நோயைக் குணப்படுத்திக் கொள்ளக் கூடாது? என்று கேட்டார்
ராமகிருஷ்ணர்:– பகவானுக்கு என்று அர்ப்பணம் செய்துவிட்ட மனதை இந்த அற்ப உடலின் பொருட்டு எப்படி நான் திருப்புவேன்?
சசாதரர்: ஆனால் வியாதியைத் தீர்த்தருள வேண்டும் என்று ஸர்வேஸ்வரியையாவது பிரார்த்திக்கக் கூடாதா?
ராமகிருஷ்ணர்::– ஸர்வேஸ்வரியை நினைத்துவிட்டால் எனது ஸ்தூல சரீர நினைவே இல்லாமல் போய்விடுகிறது. அப்போது அச் சரீரத்தில் இருப்பது இல்லை. ஆதலால் சரீரத்தப் பற்றி ஒன்றையும் பிரார்த்தித்துக் கேட்கக் கூடாதவனாக இருக்கின்றேன்.
இது போன்ற உயர் நிலை அடைய இடைவிடாத பிரார்த்தனையும் யோகப் பயிற்சியும் தேவை

No comments:

Post a Comment