Thursday, July 17, 2014

கால சர்ப்ப தோஷத்திர்க்கு சிறந்த பரிகாரம்

கால சர்ப்ப தோஷத்திர்க்கு சிறந்த பரிகாரம்
ஒரு ஜாதகத்தில் ராகு & கேது இருக்கும் இடங்களுக்குள் உள்ள ஏழு ராசிகளுக்குள் மற்ற ஏழு கிரகங்களும் இருந்து மீதி ஐந்து ராசிகள் காலியாக இருக்கும் நிலைதான் கால சர்ப்ப தோஷம் ஆகும்! இது 32 வயது வரை மிக வீரியமாகவும் பின்பு சிறிது மட்டுப்பட்டும் இருக்கும். அனுபவித்தவர்களுக்கு அனுபவிப்பவர்களுக்கு தான் தெரியும் இந்த தோஷத்தின் கொடுமை !
இங்கே கொடுக்ககப்படுபவை மிகவும் சக்தி வாய்ந்த அதே சமயம் செலவில்லாத எளிய பரிகாரங்கள். முயன்று பாருங்கள்.
(1) தினமும் இரும்பால் செய்த பாத்திரத்தில் சிறிது பாலுடன் சேர்த்த தண்ணீரை அரச மரத்திற்க்கு விட்டு வழிபட்டு வர வேண்டும். 
(2) தினசரி மஹா மிருத்யுஞ்சய மந்திர பாராயணம் மிகுந்த பலன் கொடுக்கும் 
(3) அமாவாசை அன்று மூன்று தேங்காய்களையும் சிறிதளவு நிலக்கரி துண்டுகளையும் எடுத்து கொண்டு ஓடும் நதி அல்லது நீர் நிலைகளில் ஒன்றன் பின் ஒன்றாக தேங்காயை எறிந்து பின்பு கரித்துண்டுகளையும் எறிந்து திரும்பி பார்க்காமல் வீடு வந்து சேர வேண்டும். பின்பு குளிக்கலாம். இது தோஷத்தின் கடுமையை குறைக்கும்.
தினசரி குளிக்கும் பொழுது சிறுது ராக் ஸால்ட் (இந்துப்பு) தேய்து குளித்து விட்டு பின்பு வளமான குளியல் முறையை தொடர்வது எதிர் மறை சக்திகளை உடம்பிலிருந்து நீக்கி புத்துணர்வும் அளிக்கும். கடலில் குளித்து புண்ணியம் சேரும். இது அறிவியல் ரீதியாகவும் உணர்வு பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்ட உண்மை. சில இடங்களில் குளிப்பதற்கென்றே இவை தனியாக விற்கிறார்கள்.

No comments:

Post a Comment