Thursday, July 10, 2014

தானத்துக்கும், தர்மத்துக்கும் வித்தியாசம்

தானத்துக்கும், தர்மத்துக்கும் வித்தியாசம் தெரியுமா?
உயர்ந்தவர்களுக்குக் கொடுப்பது தானம். எளியவர்களுக்கு கொடுப்பது தர்மம். பொதுவாக உதவி புரியும் எண்ணத்துடன் செய்யும் எந்த செயலுக்கும் இரவு, பகல் கிடையாது. அதற்குரிய புண்ணியம் கொடுத்தவருக்கு உடனே கிடைத்து விடும். ஆனால், மனதில் எண்ணியிருக்கும் விருப்பம் நிறைவேற வேண்டும் என்பதற்காக கொடுக்கப்படும் தானத்தை பகலில் தான் செய்ய வேண்டும். ஏனென்றால், அதற்கு சூரியதேவன் சாட்சியாக இருப்பார் என்பது ஐதீகம். சந்திர கிரகணம், திருமணச் சடங்கு, மாதப்பிறப்பு, வெளியூர் கிளம்பும் நேரம், ஆபத்து காலம்,குழந்தை பிறப்பு, ராமாயணம், மகாபாரத சொற்பொழிவு போன்றவற்றின் போது இரவு நேரத்திலும் தானம் செய்யலாம்.

No comments:

Post a Comment