Monday, July 28, 2014

சிங்கமாய் இரு

சிங்கமாய் இரு
ஞானியைச் சந்தித்த பக்தன் ஒருவனிடம் சிங்கமாய் இரு. நாயைப் போல இராதே! என சுருக்கமாக அறிவுரை கூறினார். அதன் உள்ளர்த்தம் விளங்காத பக்தன், ஞானியையே விளக்கம் தர வேண்டினான்.
ஒரு சிங்கத்தின்மீது அம்பு எய்யப்படுமானால் அது அம்பை பொருட்படுத்தாமல், எய்தவனை நோக்கியே பாயும். ஒரு நாயின் மீது எதையாவது வீசி எறிந்தால், அது எறியப்பட்ட பொருளை நோக்கியே ஓடும். எறிந்தவனைப் பற்றிக் கவலைப்படாது.
அதுபோல் வாழ்வில் கஷ்டங்களையும் பிரச்னைகளையும் எதிர்கொள்ள நேரும்போது சிங்கத்தைப்போல் அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல், அதை அளித்த இறைவனைப் பற்றி நினைக்க வேண்டும். பிரச்னைகளைத் தீர்க்கும் வழியையும், வலிமையையும் எனக்குத் தர வேண்டும் என அவரிடம் பிரார்த்திக்க வேண்டும். அதை விடுத்து நாயைப் போல் பிரச்னைகள் பின்னே ஓடக்கூடாது! என ஞானி கூற, தெளிவு பெற்றான் பக்தன்.

No comments:

Post a Comment