Thursday, July 10, 2014

மவுனமே பதில் !

மவுனமே பதில் !
மகான் ஒருவரிடம் மன்னன், முட்டாளுடன் பழக நேரிடும்போது என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான். மகான் பதில் கூறவில்லை. மன்னன் மீண்டும் கேட்டும், மகான் அமைதியாக இருந்தார். கோபத்துடன் கத்தினான் மன்னன். உடனே மகான், மன்னா! உங்கள் கேள்விக்கு தகுந்த பதில் அளித்துவிட்டேனே? நீங்கள்தான் புரிந்து கொள்ளவில்லை! என்றார். நீங்கள் பதிலேதும் சொல்லவில்லையே என்றார் மன்னர். ஆம், அரசே! அதுதான் என் பதில். முட்டாள்களுடன் பழக நேரிட்டால், மவுனம் சாதிக்க வேண்டும் ! என்றார் மகான்.

No comments:

Post a Comment