Wednesday, July 9, 2014

வடநாட்டுக் கோயில்களும், தென்னாட்டுக் கோயில்களும் அமைப்பில் முற்றிலும் மாறுபட்டு இருப்பது ஏன்?

வடநாட்டுக் கோயில்களும், தென்னாட்டுக் கோயில்களும் அமைப்பில் முற்றிலும் மாறுபட்டு இருப்பது ஏன்?
பாரத தேசத்தை நாகரம், வேஸரம், திராவிடம் என முன்று பகுதிகளாகப் பிரிக்கிறது சிற்ப சாஸ்திரம். வடநாட்டுக் கோயில் அமைப்பிற்கு நாகரம் என்று பெயர். இதில் சிற்ப சுதை வேலைகள் இருப்பதில்லை. மத்திய இந்திய பகுதியான மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு வேஸரம் என்று பெயர். இதன் அமைப்பு நாகர விமானம் போன்று இருந்தாலும், சிற்ப சுதை வேலைப்பாடுகள் தென்னாட்டு அமைப்பை ஒத்திருக்கும். தென்னிந்திய கோயில்களுக்கு திராவிடம் என்று பெயர். கண் கவர் விமானங்களும், கோபுரங்களும், கலைச் சிற்பங்களும் இதில் அடங்கும். அந்தந்த பகுதியைச் சேர்ந்த சிற்ப சாத்திர வல்லுநர்களால் எழுதப்பட்ட நூல்களின் அடிப்படையில் இந்த நடைமுறை காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment