Monday, September 15, 2014

வில்வ இலையால் சிவனை அர்ச்சிக்கும்போது தலைகீழாக கவிழ்ந்து இருக்குமாறு அர்ச்சிப்பது சிறப்பு

வீட்டிலேயே தோட்டம் உள்ளவர்கள், பூஜைக்குரிய பூக்களைப் பறித்து சுத்தமான கூடையில் போட வேண்டும். புடவைத் தலைப்பில் போடக்கூடாது. பூக்களை சுவாமியின் பாதத்தில் போடும் போது, காம்பு கீழேயும் பூவிதழ் மேலாகவும் இருக்குமாறு போடுவதே முறையானது. பூ மட்டுமில்லாமல் இலை, பழம் இவற்றிற்கும் இது பொருந்தும்.
""புஷ்பம் பத்ரம் பலம் சைவ யதோத்பன்னம் ததார்ப்பயேத்'' என்கிறது சாஸ்திரம். அதாவது, பூக்கள், இலைகள், கனிகள் அனைத்தையும் மேல்நோக்கி படைக்க வேண்டும் என்பது இதன் பொருள். ஒரே ஒரு இலைக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. வில்வ இலையால் சிவனை அர்ச்சிக்கும்போது தலைகீழாக கவிழ்ந்து இருக்குமாறு அர்ச்சிப்பது சிறப்பு.

No comments:

Post a Comment