Friday, September 19, 2014

ஆன்ம விசாரம்


ஆன்ம விசாரம்
===================
ஆன்மாவை காண முடியாது. ஆனால் உணரலாம். நல்ல தெய்வீக சிந்தனைகள் , பகவத் நாம ஸ்மரணம் சத் சங்கம் பூர்வ புண்யம் எல்லாம் வாய்க்கும் பொழுது ஒருவருக்கு இதைப்பற்றி உணரும் வாய்ப்பு அமையும்.
இதில் அத்வைதம் ஆத்மா ஒன்றே என்று சொல்லும். மற்றவை ஆன்மா பல என்ற நிலயை சொல்லும். இந்த பயிற்ச்சிகளுக்கு இந்த கேள்விகள தேவையில்லை. நாளடைவில் அதுவாக புரிகிற அனுபூதி வாய்க்கும்.
பிராணாயாம்ம் மிக முக்கியமான பயிர்ச்சியாகும்.
சரியான பூரக கும்பக ரேசகங்களை கால அளவுப்படி செய்து வரும் சாதகனுக்கு நல்ல ஆற்றல் சித்திக்கும்.பிராணாயாம்ம் செய்யும் பொழுது மூல பந்தம் செய்வது அவசியம். அபான்னையும் மேலேற்றி பிரான்னை சந்திக்க வைக்கும். இடையறாத பயிற்சியால் சுழுமுனையில் பிராணனை சேர்க்கும் பொழுது பிராணாயாம்ம் சித்தி ஆகும். மித உணவும் சாத்வீக உணவும் அவசியம். காய் கனிகள் கீரை வகைகள் சேர்க்கலாம். பாலும் தயிரும் சேர்ப்பது நலம். இரவில் தயிர் சேர்க்க கூடாது.
ஆன்மா உடலில் தரிக்கும் இடங்கள் முப்பது.இவற்றின் மூலாம் நாம் ஆன்ம பிராபவத்தை உணர முடியும்.
1, கபாலத்தில் பிரம்மரந்தரம்-உள்:ளொளியால் பிரம்ம ஞானம் உதித்து ஸ்தித பிர்க்ஞை நிலையை அடைய செய்வது.உயர்ந்த ஞானத்தின் நிலை இது.
2. சத்யம்-உச்சந்தலைக்கும் புருவ மத்திக்கும் நடுவில் இருப்பது. இது பயிலும் ஸ்தானத்தில் உறைவிடம்
3.ஆக்ஞை-புருவ மத்தி-தேஜஸின் உறைவிடம்.
4.தப:-ஸ்திரதன்மை விளையுமிடம். 3க்கும் 5 க்கும் இடையில்.
5.ஜீவன சக்கிரம்-மூக்கின் மூலஸ்தானம்.கட்டமைந்தெழிலை விளைவிக்கும் ஒஜஸ் உதிக்குமிடம்
6.ஜன:உற்சாகம் உதிக்கும் இடம்.5க்கும் 7க்கும் நடுவில்.
7.விசுத்தி- கண்டம்.தூய்மையின் பிறப்பிடம்
8.மஹ: அச்சமின்மையையும் துணிவையும் தருமிடம்.7க்கும் 9க்கும் நடுவிலிருப்பது.
9.அனாகதம்-இங்கு உள்ளொலி கேட்கப்படும் பொழுது தெய்வ தரிசனகள் நிகழும். பரம் ஆன்ந்த அனுபவத்தின் ஆரம்பம்.இறையின் மீது பற்றை அதிகரிக்க செய்யுமிடம்!
10.ஸ்வ: உடல் அனைத்துக்கும் நலம் விளைவிக்குமிடம்-9க்கும் 11க்கும் இடையில்.
11.மணிபூரகம்-நாபிகமலம்-பொறுமை ஆற்றல் சாமர்த்தியம் தருவது.
12.புவ: நோயற்ற தன்மை சித்திக்கும் இடம். 11க்கும் 13க்கும் நடுப்பட்ட்து.
13.ஸ்வாதிஷ்டானம்-வீர்யதுக்கான இடம்.
14.பூ: சத்வ சுத்தி உண்டாகும் இடம். 13க்கும் 15க்கும் நடுவில்.
15. மூலாதாரம்-குல சஹஸ்ராரம். அகண்ட பிரம்மசர்யம்-ஊர்தவ்ரேதஸ்-வலிமை ஏற்படும்
16.போதம்-மூளையின் மேற்கு பாகத்தில் இருப்பது.இதன் ஒளியால் புத்தி நேர் பாதையில் செல்லும்
17.மேதா-சிறு மூளையில் இருப்பது. விஞ்ஞான நுட்பங்களை அறிய வைப்பது
18.சரஸ்வதி-16ம் 17ம் கூடுமிடம். இது ஒளிரும் பொழுது வாக் வசமாகும்.
19.அமுர்தம்-மூளையில் சுரக்கும் திரவம்
20-ஜோதிஸ்-நெற்றி-வாழ்வில் ஜோதி ஏற்படுவது இதனால்
21 மனம்-இருதயத்தில் உள்ளது
22-சித்தம்-மனத்தின் அகத்தே இருப்பது
23.ஆத்ம ஸ்தானம்-சித்த்த்தினுள் ஆன்ம ஒளி திகழ திகழ ஆன்மா இருதயத்திலிருந்து பிரம்மரந்திரம் வரை ஏறி செல்வது
24.திருஷ்டி-கண்ணில் உள்ளது. தெய்வீக பார்வை தருவது.
25.ஸ்ருதி-காதில் உள்ளது-நல்ல தெய்வீக ஒலிகளை கேட்க வைக்கும்
26.பிராணன்-இது ஒளிர்வதால் நீண்ட ஆயுள்
27ஸ்வரம்-நாக்கிலும் கழுத்திலுமுள்ளது. இனிய குரல் வளம் ஏற்படும்.
த்வனியில் கம்பீரமும் பெரும் ஆகர்ஷணமும் சித்திக்கும்.
28.ஸ்பர்சம்-தோலிலுள்ளது.இதன் உள்ளொளியால் தெய்வீக ஸ்பரிசமும் பற்றட்ர தன்மையும் விளங்கும்.
29.அக்னி-வயிற்றில்-சமத்துவ தன்மை எழில் விளங்கும்
30.குண்டலினி-முதுகு தண்டின் கீழ் மூலாதாரத்தில் உள்ளது. மூன்றரை அடி நீளத்தில் பாம்பு போல தன் வாலை கவ்வியபடி துயிலில் இருப்பது.இது விழித்தெழத்தான் பிராணாயாம்ம் மற்ற தீக்ஷிகள் எல்லாம். இது வேலை செய்யும் பொழுது பேரொளியுடன் விளங்க வைக்கும்.

No comments:

Post a Comment