Wednesday, October 22, 2014

குபேர பூஜை செய்வது எப்படி?

குபேர பூஜை செய்வது எப்படி?
முதலில் சிறிது அரிசி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த மாவினால் மேலே உள்ளது போல 9 குபேர கட்டங்களை ஒரு மரப்பலகையில் போடுங்கள். பின்னர் அந்தக் கட்டங்களுக்குள் அரிசி மாவினால் எண்களை எழுத வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள எண் மீதும், ஒரு ரூபாய் நாணயத்தைத் தெரியும் வகையில் வைக்க வேண்டும்.

பின், அந்த மரப்பலகை எதிரே லட்சுமி குபேர படத்தை வைக்கவும், நாணயத்தின் மீது மஞ்சள், குங்குமம் வைத்து, குபேர சுலோகம் சொல்ல வேண்டும். அவ்வாறு சுலோகம் சொல்லும் போது, ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு பூவை வைக்கவும், மீதமிருக்கும் பூவை குபேர படத்தின் மீது போடவும். இந்தப் பூஜையை மிகுந்த பய பக்தியுடன் செய்ய வேண்டும்.

பூஜை முடிந்த பின்னர், கட்டங்களில் உள்ள நாணயங்களை எடுத்து உங்கள் வீட்டு பீரோவிலோ அல்லது தொழில் செய்யும் இடத்திலோ, கல்லாப்பெட்டியிலோ வைத்துக் கொள்ள வேண்டும். இந்த குபேர பூஜையால் செல்வம் பெருகும். வறுமை அகலும்.

No comments:

Post a Comment