Tuesday, October 14, 2014

ஒருவர் இறந்து விட்டால், அவரது உடலை நாம் எரிப்பது ஏன்?

ஒருவர் இறந்து விட்டால், அவரது உடலை நாம் எரிப்பது ஏன்?
நமது கலாச்சாரத்தில் இறந்தவர் உடலைப் பாதுகாக்கும் வழக்கம் இல்லை. இந்தத் தேச த்தின் கலாச்சாரம், வாழ்க்கையின் ஒவ்வோ ர் அம்சமும் மனிதனை மேல் நோக்கிக் கொண்டு செல்வதாக அமைய வேண்டும் என்றே நினைக்கிறது. உடலை எரிப்பது என்ற சடங் கும் அந்த நோக்கத் திலேயே அமைக்கப்பட் டது.
உங்களைப் பொறுத்தவரையில் அவர் இறந் துவிட்டார். ஆனால் அந்த உயிரைப் பொறுத்தவரையில் உடலைவிட்டு நழுவிவிட்டதாகத் தான் நினைத்துக்கொண்டு இருக்கும்.
இறந்தவர் இந்த உடல்தான் தனது உயிர் என் று வாழ்ந்திருப்பார். அந்த உடலோடு மிகவும் ஆழமான தொடர்போடு வாழ்ந்திருப்பார். உங்களைப் பொறுத்த வரை யில் அவர் இறந்துவிட்டா ர். ஆனால் அந்த உயிரைப் பொறுத்த வரை யில் உடலை விட்டு நழுவி விட்ட தாகத்தான் நினைத் துக்கொண்டு இருக்கும். எனவே மீண்டும் அந்த உடலுக்குள் நு ழைந்து விடலாம் என்றே அந்த உயிர் துடிக்கும். என வே, வாய்ப் பை எதிர்நோக்கி அந்த உடலைச் சுற்றியே உயிர் சுற்றிக் கொண்டு இருக்கும். உடல் முழு மையாக இருக்கும் வரை அந்த உயிரால் அங்கிருந்து நகர முடியா து. அந்த மனிதர் ஞானம் அடைந்திருந்தால், அந்த உடலைவிட்டு நீங் கிய கணத்திலேயே அந்த உயிர் மகிழ்ச்சியாக அங்கிருந்து வெளியேறி விடும். ஆனால், சரியான புரிதல் இல்லா த உயிர் அந்த உடலையே சுற்றி வரும். இது அந்த உயி ருக்கும் நல்லதல் ல. இறந்தவருடன் பழ கியவ ர்க்கும் அந்த உடலைப் பார்த்துப் பார்த்து பல நினைவு களால் வருத்தம் அதிகமாகியே போகும்.
உயிரை விட்டவரும் சரி, உறவினர்களு ம் சரி, உடல் அங்கிருக்கும் வரை, வேத னையோடு இருப்பர். எனவே விடைபெற வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை அந்த உயிர் உண ரவேண்டும் என்பதால், அந்த உடலை முழுமையாகவும் விரைவாகவும் அழிக்க வேண் டும் என்னும் நடைமுறை உண்டாக்கப்பட்டது. எனவே தான் இறந்த ஒன்றரை மணி நேரத்துக்குள் உடலை எரிக்க வேண்டும் என்ற விதி ஏற்படு த்தப்பட்டது. அவசரத்திலும் பதற்றத்திலும் தவறான முடி வெடுத்து உயிருடன் இரு க்கக்கூடியவரையும் தவறுதலாக எரிக்கப்பட் டுவிடலாம் என்பதால், அதை நான்கு மணிநேரம் என பிற்பாடு மாற்றி அமைத்தார்கள்.
தாம் அறிந்த அந்த உடல் இனி இல்லை, அடையாளமற்று எரிந் து கைய ளவு சாம்பலாகிவிட்டது என்னும் உண்மையை அறியும் போது, இறந்த உயிரும் அந்த இடத்திலேயே பரிதவித்துக் கொ ண்டு இருக்காது. இங்கு உயிருட ன் இருப்பவர்களும் மாண்டவன் இனி மீளப்போவதில்லை என்று ஒரு வித அமைதி கொள்வார்கள். எனவேதான் ஒருவர் இறந்துவிட்டால் அவரை உடனடியாக எரிப்பது நமது கலாச்சாரத்தில் இருந்துவருகிறது.
போதிய விறகு இல்லாத பாலைவனங் களிலும், நெருப்பு நின்று எரியாத குளிர்ப் பிரதேசங்களிலும் எரிப்பதைவிட புதைப்பது சுலபமாக இருந்தது. எனவே அத்தகைய நாடுகளில் அதுவே அவர்களது நடைமுறையாக மாறிவிட்டது!

No comments:

Post a Comment