Monday, October 20, 2014

பிள்ளையார் பிடிக்க குரங்காக முடிந்தது

பிள்ளையார் பிடிக்க குரங்காக முடிந்தது என்று ஒரு பழமொழி இருக்கிறது. இதன் உண்மையான பொருள் எந்தவொரு செயலையும் தொடங்கும் பொழுது விநாயகரை வழிபட்டு நாம் தொடங்க வேண்டும். கவிதை எழுதும் பொழுது கூட கணபதி காப்பு என்று எழுதுவது வழக்கம்.

காரியம் நிறைவடையும் பொழுது ஆஞ்சநேயரை வணங்கி விட்டு முடிக்க வேண்டும். ஆதியில் விநாயகனையும், அந்தமாக அனுமனையும் வழிபட வேண்டும். விநாயகருக்கு அனுமனும் இணைந்த உருவத்தை ஆதியந்தப்பிரபு என்று அழைக்கின்றோம். இதற்குரிய சன்னதி ஒருசில இடங்களில் இருக்கின்றது. வீட்டில் பட வடிவத்திலும் வைத்து வழிபாடு செய்யலாம்.

No comments:

Post a Comment