Monday, October 20, 2014

நவராத்திரி கொலு உணர்த்தும் மூன்று குணங்கள்

நவராத்திரியின் சிறப்புகளில் ஒன்றாக கொலு வைக்கும் நிகழ்வு உள்ளது. இந்த கொலு வைக்கும் முறையில் ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கியுள்ளன. நவராத்திரியின் ஒன்பது நாட்களை குறிக்கும் வகையில் ஒன்பது படிகள் அமைக்கப்பட்டு கொலு வைக்கப்படும்.

இதில் கீழே உள்ள முதல் மூன்று படிகளில் வைக்கப்படும் அரிசி, பருப்பு, பாத்திரம் போன்றவை தாமச குணத்தை குறிக்கும். அடுத்த மூன்று படிகளில் வைக்கப்படும் அரசர், ராணி, மந்திரி போன்றவை ரஜோ குணத்தை எடுத்துரைக்கும். மேலே உள்ள மூன்று படிகளில் வைக்கப்படும் தெய்வ உருவங்கள் சத்துவ குணத்தை அடையும் வழியை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

No comments:

Post a Comment