Monday, November 17, 2014

நல்லது என ஒன்றிருந்தால் கெட்டது என ஒன்றும் இருக்கத்தானே செய்யும்

ஒரு குருவும், சீடனும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
ஓரிடத்தில், பொருளை திருட்டுக் கொடுத்தவர்கள் அழுது கொண்டிருந்ததைப் பார்த்தனர்.
சீடன், குருவிடம் கேட்டான்.
""குருவே! ஆண்டவன் தானே உலகத்தைப் படைத்தார்.
எல்லோரையுமே நல்லவர்களாகவே படைத்திருந்தால்.... உலகத்தில் பிரச்னையே இருந்திருக்காதே....?''
குரு அதைக் கேட்டு சிரித்தார்.
""அப்பனே! நீ எத்தனை நாள் உயிர் வாழ்வாய்?'' என்றார்.
""தெரியவில்லை! அநேகமாய் எழுபது ஆண்டு வரை இருக்க ஆசை...''
""ஏனப்பா! சாகாவரம் பெற ஆசையில்லையா?
""எப்படி முடியும் குருவே! பிறந்தவன் ஒருநாள் இறந்து தானே ஆக வேண்டும்...''
குரு மீண்டும் சிரித்தார்.
"" பிறப்பு என்றால் இறப்பும் இருக்கிறது அல்லவா! அது போல, நல்லது என ஒன்றிருந்தால் கெட்டது என ஒன்றும் இருக்கத்தானே செய்யும்! எல்லோரும் நல்லவர்களாக இருந்து விட்டால், அவர்களுக்கு எப்படி மரணத்தைக் கொடுக்க முடியும். அதனால் தான், நல்லதும் கெட்டதுமாய் நிறைந்த உலகத்தைக் கடவுள் படைத்தார். புரிகிறதா....'' என்றார்.
சீடனுக்கு பிறப்பின் அடிப்படை புரிந்தது.

No comments:

Post a Comment