Thursday, November 13, 2014

தீபாவளி பண்டிகையின் தத்துவம்

தீய குணங்களை அழித்து அறியாமை இருளினை அகற்றி நமது ஆன்மா தெளிவான ஞான ஒளி பெறுதலே தீபாவளி ஆகும். ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்ச சதுர்த்தியன்று தீபாவளி பண்டிகை தீப அலங்கார பண்டிகையாக இல்லங்கள் தோறும் மங்களகரமாக கொண்டாடப்படுகிறது.

தீபங்கள் ஏற்றப்படும்போது இருள் விலகி விடும். தீபம் விளக்கு, ஆவளி-வரிசை நம்மிடம் உள்ள காமம், கோபம், மோகம் மதம், மாச்சரியம் ஆகிய இருள்களை வரிசைப்படுத்தி இறைவனுடைய திரு நாமம் என்னும் தீபத்தினால் எரித்து ஆன்ம ஒளி பெற வேண்டும் என்பது தீபாவளி பண்டிகையின் தத்துவம் ஆகும்

No comments:

Post a Comment