Thursday, November 13, 2014

வீரபாகு வழிபாடு

கந்த புராணத்தின் படி, முருகனது படைவீரர்களாக செயலாற்ற வேண்டி அன்னை பார்வதியின் பாதச் சிலம்பிலிருந்து ஒன்பது வீரர்கள் உதித்தனர். இவர்கள் "நவ வீரர்கள்'' என்று அழைக்கப்படுவர். இவர்களின் தலைவர் வீரபாகு.

இந்த நவ வீரர்களின் வழிபாடு தமிழகத்தின் எல்லா முருகன் கோவில்களிலும் உள்ளதென்றாலும் திருச்செந்தூரில் மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது.

தமிழ் நாட்டின் வீரத் தெய்வமாகத் திருமுருகன் காலம் காலமாக விளங்கி வருகிறான். "வீர வேல், வெற்றி வேல்'' என்ற கோஷமே அதற்குச் சான்றாகும்

No comments:

Post a Comment