Tuesday, November 18, 2014

விரதத்தின் போது கடைப்பிடிக்க வேண்டியவை!

விரதத்தின் போது கடைப்பிடிக்க வேண்டியவை!
கடவுளை எண்ணி விரதம் மேற்கொள்வதால் நமது உள்ளம் தூய்மை அடைவதுடன் அறியாமையினால் நாம் செய்த தீவினைகளும், பாவங்களும் நம்மை விட்டு விலகும். விரதம் மேற்கொள்ளும்போது கீழ்கண்டவற்றை தவறாது கடைப்பிடிக்கவேண்டும்.
*சதாசர்வ காலமும் மனதில் இறைவனை மட்டுமே எண்ணி துதித்தல் வேண்டும்.
*தம்மை விதவிதமாக அலங்காரம் செய்து கொள்ளாமலும், நாவிற்கு சுவையான உணவு வகைகளை உண்ணாமலும் இருத்தல் வேண்டும்.
*கேளிக்கைச் செயல்களிலோ, வீண் விவாதங்களிலோ ஈடுபடக்கூடாது.
*பிறரைப்பற்றி புறம் பேசுவதோ, குறை கூறுவதோ கூடாது.
*அடுத்தவர் மனம் துன்பப்படும்படியான தீய சொற்களைப் பேசக்கூடாது.
*மனதில் தான் என்ற கர்வத்தை அறவே அகற்ற வேண்டும்.
*விரும்பத்தகாத செயல்களை செய்யக்கூடாது.
*அதிகமாக தானம் செய்ய வேண்டும். அவ்வாறு, தானம் செய்யும்போது எவ்வளவு பொருள் கொடுத்தாலும், இவ்வளவு குறைவாகவே கொடுக்கிறோமே! என்ற எண்ணத்துடன் கொடுக்கவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் எளிதில் இறைவனின் அருளை எளிதில் பெறலாம்.

No comments:

Post a Comment