Monday, December 8, 2014

ஹோமம் நடத்துவது ஏன்?

ஹோமம் நடத்துவது ஏன்?
காலம் மாறும்போது எல்லா துறைகளிலும் திருப்பங்கள் நிகழும். உலகில் இயற்கை சூழ்நிலைகள் மாறும். இவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள ஹோமங்களை நடத்த வேண்டும். இறைவன் ஹோமங்கள் மூலமாக நமது கோரிக்கையை அறிந்து கொள்கிறான். அக்கோரிக்கைகள் அக்னிகுண்டங்கள் மூலமாக இறைவனை சென்றடைவதாக நம்பிக்கை. எனவே தான் ஹோமம் நடத்தப்படுகிறது.
அக்னியின் பெருமை
ஹோமங்களில் வளர்க்கப்படும் அக்னியை சாதாரண நெருப்பாகக் கருதக்கூடாது. அக்னிதேவன் மற்ற தெய்வங்களின் தூதர் போலவும், அவர்களது வாய் போலவும் செயல்படுகிறார். மனிதன் மற்ற தெய்வங்களுடன் தொடர்பு கொண்டு பேச அக்னியை பயன்படுத்திக் கொள்கிறான். உணவும் அக்னி மூலமே கொடுக்கப்படுகிறது

No comments:

Post a Comment