Saturday, May 9, 2015

மனைவி_மருமகள்_குழந்தை_மாப்பிள்ளை_பெண்

*** எந்த வீட்டில் , மனைவியை, மருமகளை, பெண்ணை, காரணம் இல்லாமல் வெறுக்கிறார்களோ, கொடுமைபடுத்துகிரார்களோ,அந்த வீட்டில் மூதேவி குடிகொண்டு இருக்கிறாள் என்று அர்த்தம்.
மகாலட்சுமி அங்கு வரவே மாட்டாளாம்.
ஆனால், இதை புரிந்துகொள்ளவே ஒரு புண்ணியம் தேவைபடுகிறது.
ஆணவம் அகம்பாவம், தான் என்கிற திமிர் உள்ள இடத்தில், கலி புருஷன் இருக்கிறான். மகாலட்சுமி இருந்தும் இந்த இடத்தில் பிரயோசனம் இல்லையாம்
*** உங்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால், உங்கள் குழந்தைகளையும் அதுபோல் பழக்காதீர்கள். சிலசமயம் பல நாள் கழித்து, யாரை நீங்கள் பிடிக்கவில்லை என்று சொன்னீர்களோ, அவர்களை உங்களுக்கு பிடிக்கும்போது, குழந்தைகள் ஏற்றுக்கொள்ளாது.எதனால் என்றால், சிறுவயதிலேயே நீங்கள் விதைத்ததுதான் காரணம்.
*** எந்த மாமியார், தனக்கு கிடைத்த நல்ல மாப்பிள்ளையை புரிந்துகொள்ளாமல், தவறாக தனது பெண்ணிற்கு சொல்லிகொடுத்து, பிரிக்க நினைக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் , சாஸ்திரம் எச்சரிக்கிறது.
பிற்காலத்தில், தனது பெண்ணின் மூலமாகவே, ஒதுக்கி தள்ளபடுவார்கள் என்று.
அஆகவே, உங்கள் பெண்ணிற்கு நல்லதுசொல்லி வளருங்கள்.

No comments:

Post a Comment