Sunday, May 17, 2015

ஆசீர்வாதம் என்றால் என்ன?

உண்மையை அறிவோம்
(ஆய்வுக்கட்டுரை)
ஆசீர்வாதம் என்றால் என்ன?
தமிழர்களின் கலாச்சார வழக்கத்தில் ஒன்று ஆசீர்வாதம்/ வாழ்த்துதல். இது திருமணம், காதுகுத்து, பிறந்தநாள், கோயில்கள், விசேட தினங்கள் போன்ற எதுவாக இருந்தாலும் ‘பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கு’ என்று நம்மை கூறுவது வழக்கம்.
ஆசீர்வாதம் என்றால் என்ன? வயதில் பெரியவர்கள் தான் ஆசி வழங்க முடியுமா? 
‘எல்லாம் நல்லதே நடக்கட்டும்’ என்று உங்களிடம் யாரேனும் சொன்னால், அது ஆசீர்வாதம் கிடையாது. அது ஒரு விருப்பம், ஒரு நல்ல எண்ணம். அவ்வளவுதான். ‘ஆசி’ என்பது எண்ணங்கள் அல்ல. அது ஒரு குறிப்பிட்ட அளவிலான சக்தி. ஆசி என்பது நல்லதும் அல்ல; கெட்டதும் அல்ல. அது எரிபொருள். உங்கள் வளர்ச்சியை துரிதப்படுத்திக் கொள்ள உங்களுக்கு உதவும் வஸ்து அது. 
உதாரணத்திற்கு, உங்கள் காரில் எரிவாயு இல்லை. காரைத் தள்ளிக் கொண்டு போவது மிகவும் கடினம், அதோடு தாமதம் வேறு ஆகும். இதுவே யாரேனும் எரிபொருள் தந்து உதவினால், வெகு சுலபமாக, வெகு விரைவாக வேண்டிய இடத்திற்குச் சென்று விடலாம். ஆசி என்பது இந்த எரிவாயு போன்றது. அது வெறும் வாழ்த்தோ, எண்ணமோ, உணர்ச்சியோ அல்ல. அது ஒரு சக்தி.
ஆசி பலவிதங்களில் வரும். நீங்கள் விரும்பியவாறு தான் அது வரவேண்டும் என்று அவசியமில்லை. எந்த அளவிற்கு ஏமாற்றம் தருகிறதோ அந்த அளவிற்கு அது உங்களுக்கு நல்லதைத் தரும். இது ‘ஆசி’ என்று நீங்கள் நினைக்காத விதங்களில் கிடைக்கும் ஆசி, உங்களுக்குப் பல நன்மைகளையும் செய்யும். ஆசி என்பது நல்லதும் அல்ல; கெட்டதும் அல்ல. அது எரிபொருள். உங்கள் வளர்ச்சியை துரிதப்படுத்திக் கொள்ள உங்களுக்கு உதவும் வஸ்து அது.
ஆசீர்வாதத்தில் காலைத்தொட்டு வணங்குவது ஏன்?
காலைத் தொட்டு வணங்குவது, சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது போன்றவற்றில் கலாச்சார அடிப்படையும் உண்டு, விஞ்ஞான அடிப்படையும் உண்டு. கலாச்சாரம் என்று பார்த்தால், மனிதர்கள் தம் மனதில் உள்ள மரியாதை உணர்வினை வெளிப்படுத்தும் முறை என்று சொல்லலாம். பெரியவர்கள், குறிப்பாக தாய், தந்தையரின் காலில் விழுவது எதற்கென்றால், நாம் இவ்வுலகில் பிறப்பதற்கே அவர்கள்தான் காரணம். நாம் கடவுளை இன்னும் உணராமல் இருக்கலாம். ஆனால் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்று சொன்னது கூட பெற்றோர்தானே? எனவே நாம் இருப்பதற்கு மூலகாரணமான அவர்களை நாம் வணங்குகிறோம்.
இதன் விஞ்ஞானத்தைச் சொல்வதென்றால், உங்கள் உடலை வெறும் தசை, எலும்பு, நரம்பு என்று வெறும் உறுப்புகளாகப் பார்க்கலாம். அல்லது உடல் என்பதை சக்தி அடிப்படையிலும் பார்க்கலாம். இந்த சக்திதான் உங்கள் எல்லா உறுப்புகளையும் உருவாக்க அடிப்படையாக இருக்கும் சக்தி. இதை குறிப்பிட்ட வகையில் ஒருங்கிணைத்தால், ஒருவரின் உடலிலிருந்து சக்தி வெளிப்படும் விதமாகச் செய்ய முடியும்.
மேலும் நம் பாதங்களில் மிகவும் அதிகமான சக்தி ஓட்டம் நடக்கிறது என்று விஞ்ஞானப்பூர்வமாக நிரூபித்து இருக்கிறார்கள். அதை உபயோகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் காலில் விழும் பழக்கம்.
யோக முறைப்படி சொல்லப் போனால், சாஷ்டாங்க நமஸ்காரம் என்பது சூரிய நமஸ்காரத்தில் மிக முக்கியமான ஒரு நிலை. சாஷ்டாங்க நமஸ்காரம் என்றால் உடலின் எட்டு அங்கங்கள் மட்டுமே தரையில் பட வேண்டும்.
திருமணத்தின் போது மணமக்களை கிழக்கு முகமாக நிற்க வைத்தக் குருக்கள் பிராத்தனன செய்து மந்திரத்துடன் ஆசீர்வாதம் சொல்லி மணமக்களுக்கு ஆசிர்வாதம்வாதம் சொல்லி மணமக்களுக்கு சிரசில் அட்சதையிட்டு ஆசீர்வதிப்பர். தொடர்ந்து மணமகளின் பெற்றோர் சபையில் ஆசிர்வதிப்பர்.
ஆங்கிலத்தில் ஆசீர்வாதத்தினை BLESSING என்று கூறுவார்கள்.
என்ன சொல்லி வாழ்த்தவேண்டும்?
மனதிற்கு பிடித்தமான எந்தவொரு நல்ல சொல்லையும் கூறி வாழ்த்த முடியும்.
உதாரணமாக பெண்களுக்கு- தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும்
ஆண்களுக்கு - சகல செளபாக்கியங்களும் கிடைக்கவேண்டும்
மணமக்களுக்கு - பதினாறும் பெற்று வாழ்க என்றும் பலவகையாக வாழ்த்தலாம்

No comments:

Post a Comment