Monday, November 23, 2015

மணப்பெண் - மணமகனுக்கு நெறிமுறை

மணப்பெண் - மணமகனுக்கு நெறிமுறை
v தோழிப்பெண் (தோழிமாப்பிள்ளை) முன்செல்ல மணமகள் (மணமகன்) தொடர்ந்து வர மணவறையை ஒரு முறை வலம்வந்து மணவறையில் நின்று வருகையாளர்களுக்கு வணக்கம் செலுத்தி வலதுகாலை முன்வைத்து உள்ளே வரவும் பின்னர் மரமணையின் மேல் அமரவும்
v மணமகன் வேஷ்டி (பேன்ட் தவிர்க்கவும்) அனிந்து முன்நாள் பயண்படுத்திய மாலையை சாற்றி வரவும்
v மணமக்கள் ஒவ்வொரு முறை மணவறையில் நுழையும் பொழுதும் வலதுகாலை முன்வைத்து உள்ளே வரவும் வருகையாளர்களை பார்த்து தலைவணங்கி வணக்கம் செலுத்தவும்
v திருமண சடங்கு முடியும் வரை சிரித்த முகத்துடன் காட்சியளிக்கவும்
v தோழி, நன்பர்கள் சிலரை தங்கள் அருகில் திருமண சடங்கு முடியும் வரை இருக்கசொல்லவும்
v யார் அருகில் வந்தாலும் தலைவணங்கி வணக்கம் செலுத்தவும்
v திருக்கோயில் போன்று மிகவும் புணிதமான இடம் மணவறை ஆகும் எனவே அதற்குரிய மரியாதையினை தரவும்
v கைத்தொலைபேசியை மணமேடையில் பூஜையின் பொழுது பயண்படுத்த வேண்டாம்
v மணமேடையில் ஆடை விலகாமல் பார்த்துக்கொள்ளவும்
v தாலிகட்டும் பொழுது தங்களின் குலதெய்வத்தை பிரார்த்தனை செய்யவும்
v திருமண சடங்குகள் முடியும் வரை மனதில் இறைவனது நாமங்களை உச்சரிக்கவும்
v இறைஉணர்வான ஒரு இந்த நிகழ்ச்சியின் பொழுது தங்களின் குல வழக்கப்படி நெற்றியில் நாமம் அல்லது விபூதி இடவும். இதில் கூச்சப்படவேண்டிய அவசியம் இல்லை
v தங்களின் பாரம்பரிய உடை (பஞ்சகச்சம்) உடுத்தினால் தான் திருமணத்திற்கு அழகு, வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் புனிதமான வாய்ப்பு ஆகும்
v மாதா பிதா குரு தெய்வம் எனவே திருமணத்திற்கு உங்களின் ஆரம்ப வகுப்பு ஆசிரியர்களை வருகைதந்து வாழ்த்த அழையுங்கள், மணமேடைக்கு அவர்களை வரவழைத்து உரிய மரியாதை செலுத்துங்கள்
v வாழ்க்கையில் 100 ஆண்டு சேர்ந்து வாழவேண்டும் என்று பிரார்த்தனை செய்து முதன்முறையாக மணமகளின் கைப்பற்றி அக்னியை வலம் வரும் பொழுது இடையில் யாரேனும் கைகுலுக்க முனைந்தால் கட்டாயம் அன்பாக பேசி தவிர்க்கவும் (இணந்தகைகளை பிரிக்ககூடாது)
v திருமண சடங்கை எடுக்கத்தான் புகைப்படம் (புகைப்படத்திற்க்காக நடக்கும் சடங்கு திரைப்படம்)
v பாதஅணியுடன் வரும் நட்பு, உறவுகளுடன் மணமேடயில் புகைப்படம் எடுப்பதை தவிர்க்கவும், திருமண சடங்கு முடிந்ததும் மணமேடைக்கு முன்னர் தரையில் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும்
v தோழி மாப்பிள்ளை பட்டு அல்லது கதர் வேட்டி கட்டிக்கொள்ள சொல்லவும் அதுதான் அழகு, மரபும்கூட
v பெரியவர்கள் மேடையில் வந்து ஆசிர்வாதம் செய்யும் பொழுது கூச்சப்படாமல் தலைவணங்கி, பாதம் தொட்டு மரியாதை செலுத்தவும்
v திருமணத்தின் பின்னர் இருவீட்டாரின் நன்பர்களும், உறவினர்களும் பொதுவானவர்களை எனவே மணமகள் உறவினர், மணமகன் உறவினர் என பாகுபாடு இன்றி வணக்கம் தெரிவிக்கவும்
v மணமக்கள் தங்களின் உறவினர்கள் மேடைக்கு வரும்பொழுது பரஸ்பரம் உறவுமுறை சொல்லி அறிமுகம் செய்யவும்
v மெட்டி போடும் பொழுது மணமகளின் பாதங்களை இருகைகளால் தாங்கி அம்மியின் மீது பதிக்கவும்

No comments:

Post a Comment